tamilnadu

img

புரோ கபடி அணி மாறி பார்ம் பிரச்சனையில் சிக்கிய பிரதீப் நார்வல்

இந்திய கபடி அணியின் முக் கிய நட்சத்திர ஆட்டக்கார ரான ஹரியானவைச் சேர்ந்த பிரதீப் நார்வல் புரோ கபடி தொடரில் தற் போது உத்தரபிரதேச (உ.பி., யோதா) அணிக்காக விளையாடி வருகிறார்.  இதற்கு முந்தைய சீசன்களில் பாட்னா (பாட்னா பைரட்ஸ்) அணிக் காக விளையாடி அசத்திய பிரதீப் மிக  குறுகிய காலத்தில் அதிக புள்ளிகளை (1,213  புள்ளிகள்) குவித்த முதல் வீரர் என்ற சாத னையை படைத்தவர். ஆனால் தற்போது நடை பெற்று வரும் 8-ஆம் சீசனில் பிரதீப் புள்ளிகளை குவிக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அணி மாறியது தான் என்று கூறலாம். கடந்த சீசனை போல் அல்லாமல் சோர்வாக விளையாடி வருகிறார்.  தாவிக் குதிக்கும் சிறப்புடைய  பிரதீப் ஒரே  ரைடில் 6 புள்ளிகளை கூட குவிப்பார். ஆனால்  தற்போது எதிரணிகளிடம் விரைவில் சிக்கி விடுகிறார்.  குறிப்பாக பிரதீப் நார்வல் வெளி யேறிய பாட்னா அணி திணறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் போல அசத்தலாக விளை யாடி வருகிறது புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேச அணியோ 6-வது இடத்தில் உள்ளது. பிரதீப் நார்வலின் மோச மான பார்ம் புரோ கபடி விளையாட்டி லும் சுவாரஸ்யம் இல்லாமல் சோர்வாக நகரு கிறது. இருப்பினும் நவீன் (தில்லி), பவன் (பெங்களூரு) ஆகியோரின் அசத்தலான செயல்பட்டால் சற்று விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இன்றைய ஆட்டங்கள்  பாட்னா - மும்பை (இரவு 7:30) டைட்டன்ஸ் - குஜராத் (இரவு 8:30) இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டங்கள் 

பாட்னா - மும்பை (இரவு 7:30)
டைட்டன்ஸ் - குஜராத் (இரவு 8:30)
இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவில்
நடைபெற்று வருகிறது.