சென்னை, பிப். 19- சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அஞ்சல் - ஆர்.எம்.எஸ் கேசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சங்கத் தின் மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் 4ஆவது மாநில மற்றும் கோரிக்கை மாநாடு சென்னையில் ஞாயிறன்று (பிப்.19) நடைபெற்றது. மாநிலத் தலைவர் டி.சிவகுருநாதன் தலைமை தாங்கினார். சுரேஷ் வரவேற்றார். சங்கக் கொடியை ஜெ.ரங்கநாதன் (முன்னாள் ஆசிரியர் உழைக் கும் வர்க்கம்) ஏற்றினார். தேசியக் கொடியை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன செயல் தலைவர் எம்.துரைப்பாண் டியன் ஏற்றினார். மஜூம்தார் மாநாட்டை தேசிய அஞ்சல் ஊழியர் சம் மேளன மாநில பொதுச்செயலா ளர் ஜனார்த்தன்துவக்கி வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் சி.துரைராஜ் வேலை அறிக்கை யையும், பொருளாளர் வி.ரமே ஷ்குமார் வரவு-செலவு அறிக் கையையும் சமர்ப்பித்தனர். அகில இந்தியத் தலைவர் சி.சி.பிள்ளை, அஞ்சல் 4 பொதுச் செயலாளர் டி.பி.மொகந்தி, பொதுச் செயலாளர் பி.மோகன், முன்னாள் மாநிலத் தலைவர் கே.ஆர்.கணேசன், அஞ்சல் 3 ஏ.வீரமணி, ஆர் 4 பி.பரந்தாமன், ஆர்.விஷ்ணு தேவன், எம்.சுதாகரன், முன் னாள் உதவி பொதுச்செய லாளர் ஆர்.சந்தானம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். செயல் தலைவர் எம்.சேகர் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார்.
தீர்மானங்கள்
கமலேஷ் சந்திரா கமிட்டி சிபாரிசு படி சிடிஎஸ் நிய மனத்தில் கேசுவல் ஊழியர்க ளுக்கு இருந்த முன்னுரிமையை ரத்து செய்த அரசு உத்தரவை திரும்பப் பெற வேண்டும், எம்டிஎஸ் நியமனத்தில் ரெக்ரூட் மெண்ட் விதிப்படி 25 விழுக் காடு கேசுவல் ஊழியர்களை நிய மனம் செய்ய வேண்டும். யார் யார்? கேசுவல் ஊழியர் என்று அஞ்சல் துறை வெளி யிட்ட உத்தரவுப்படி ஓஎஸ், மஸ்தூர், கண்டிஜன்ட் ஊழியர், டெய்லி வேஜர், டெய்லி ரேடட்ட் மஸ்தூர் கூலி போன்ற பெயர் களில் வேலை செய்வோர் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்தால் முழுநேர கேசுவல் ஊழியர் என்றும் 8 மணி நேரத்திற்கு குறைவாக வேலை செய்தால் பகுதி நேர கேசுவல் ஊழியர் என்ற அஞ்சல் துறை உத்தரவை அமலாக்க வேண்டும். வார விடுமுறை உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும், கேசுவல் ஊழியர் களுக்கு காலதாமதமின்றி ஊதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
செயல் தலைவராக எம்.சேகர், தலைவராக சிவகுரு நாதன், பொதுச் செயலாளராக சி.துரைராஜ், பொருளாளராக வி.ரமேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.