சென்னை, மார்ச் 27 - துறைமுக ஊழியர்கள் ஏப். 5-ந் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து இந்திய தேசிய துறைமுக தொழிலாளர் சம்மேளன தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.கே.சமந்தராய், அகில இந்திய துறைமுகம் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பி.எம்.முகமது ஹனீப் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்புக்கு ஏற்ப மார்ச் 28-29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற் கிறோம். அரசின் சொத்துக்களாக உள்ள பெரிய துறைமுகங்கள் லாபம் ஈட்டு கின்றன. இத்தகைய துறைமுக முனை யங்களை தனியாரிடம் கொடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப் பாக, 9 முக்கிய துறைமுகங்களில் 31 லாப மீட்டும் சரக்கு கையாளும் முனை யங்களை தேசிய பணமயமாக்கல் திட்ட த்தின் கீழ் ரூ.14 ஆயிரத்து 485 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சரத்துகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏப்.5 அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். துறைமுக தொழிலா ளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் மீண்டும் நாடு தழுவிய அளவில் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் 11 பெரிய துறைமுகங்களில் பணியாற்றும் ஒரு லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் துறைமுகங்களில் சரக்கு ஏற்றுவது, இறக்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். துறைமுக நிர்வாகத்துக்கு ரூ.400 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும். இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை தலைமை ஆணையரிடம் பலகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. அவை அனை த்தும் தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாகவே வேலைநிறுத்தம் நடை பெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப் பின்போது நீர்வழிப் போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் தி.நரேந்திரராவ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.