மதுரை, மே 8- ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொ டர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி புரத்தில் டாஸ்மாக் கடை யை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்ப குதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மதுரை மீனாட்சிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பகுதிகுழு செயலாளர் ஏ. பாலு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்லூர் மீனாட்சிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை திறப்ப தற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையை முற்று கையிட்டனர் டாஸ்மாக்கை காவல் காத்த காவல்துறை யினர் மக்களை விரட்டி யடித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் கே. அலாவுதீன், வாலிபர் சங்க பகுதிக்குழு செயலாளர் சரண், பகுதிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக அப்பகு தியில் திரண்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து கண்டன முழக்கங்களை எழு ப்பினர். பெண்களையும் காவல்துறையினர் அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களை கா வல்துறையினர் ஏற்கெனவே காவல் நிலை யத்தில் கொரோனா தொற்று பரவிவரு கிறது. உங்களை அங்கே கொண்டு அடைத்து விடும் என மிரட்டினர்.