tamilnadu

img

சிபிஎம் 24-ஆவது அகில இந்திய மாநாடு புதுக்கோட்டையில் வரவேற்புக்குழு அமைப்பு

புதுக்கோட்டை, பிப்.9-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் மாதம் 2 முதல் 6-ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக்குழு சார்பில் அகில இந்திய மாநாட்டு வர வேற்புக்குழு அமைப்புக்கூட்டம் சனிக் கிழமையன்று புதுக்கோட்டை யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில செய லாளர் பெ.சண்முகம் அரசியல் விளக்க வுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து  விளக்கிப் பேசினார். மாநாட்டு நிதி ரூ.5 லட்சம் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதி முதல் தவனை யாக ரூ.5 லட்சம் மாநில செயலாளர் பெ.சண்முத்திடம் புதுக்கோட்டை  மாவட்டக்குழு சார்பில் வழங்கப் பட்டது. முன்னதாக மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன் வரவேற்க, புதுக்கோட்டை  மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலார்கள், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.