tamilnadu

img

ஒரே நாளில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் பதிவு

ஒரே நாளில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் பதிவு

ஏப்ரல் 11 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதை யொட்டி, மாநிலம் முழுவதும் ஒரே  நாளில் 500 குழுக்கள் மூலம் ஒரு லட்சம்  உறுப்பினர் பதிவு நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் 89 ஆம் ஆண்டு அமைப்பு தினமான  ஏப்ரல் 11 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள், இணைப்பு சங்கங்கள் என ஒரே நாளில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு பணியில் ஈடுபடுவதென்று முடி வெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் வெள்ளியன்று (ஏப்.11) தமிழகம் முழுவதும் 500 குழுக்கள் மூலம் ஒரு லட்சம் உறுப்பி னர் பதிவு செய்யப்பட்டது. இந்த பேரி யக்கத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் தஞ்சாவூரிலும், மாநில பொரு ளாளர் கே.பி.பெருமாள் தூத்துக்குடி யிலும், மாநில துணைத் தலை வர்கள் டி.ரவீந்திரன் திருவண்ணா மலையிலும், பி.டில்லிபாபு ஈரோட்டி லும், மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள் நாமக்கல்லிலும் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டக் குழு,  இடைக்குழு உறுப்பினர்கள் என ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.