tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மே 20-இல் ஒருநாள் வேலை நிறுத்தம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மே 20-இல் ஒருநாள் வேலை நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 22-  தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. கூட்டத்திற்கு பெடரேஷன் தலைவர் பாஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ. சேக்கிழார் சிறப்புரையாற்றினார்.  மே.20 வேலை நிறுத்தம் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கும், மின்வாரிய பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, மின் கட்டண உயர்வை அதிகப்படுத்தக்கூடிய ஒன்றிய அரசால் அழுத்தம் கொடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மத்திய தொழிற்சங்கம் அறைக்கூவலுக்கு ஏற்ப தொழிலாளர் நலச்சட்டங்கள் 44 ஐ 4 ஆக குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது என முடிவு செய்யப்பட்டது.  ஜுன்.26 பொது வேலை நிறுத்தம் அனைத்து மாநிலங்களிலும் மின்சார வாரியங்களை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து தேசிய ஒருங்கிணைப்புக் குழு மின்சார பொறியாளர் மற்றும் தொழிலாளர் சார்பில் ஜூன் 26 ஆம் தேதி தேசம் தழுவிய அளவில் நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் பங்கேற்று வெற்றி பெறச் செய்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநில பொருளாளர் பழனி நன்றி கூறினார்.