அம்பத்தூர், ஜன. 27- ராணுவம் புதிதாக வடிவ மைத்துள்ள சீருடைகள் உற்பத்தி செய்வ தற்கான அனுமதியை பெறும்வரை போராட ஆவடி உடை படைத்துறை (ஓசிஎப்) தொழிலாளர்கள் குடியரசு தினத்தன்று உறுதிமொழி ஏற்றனர். இந்திய ராணுவ வீரர்கள் போர்க்க ளத்திலும் பயிற்சியின்போதும் அணிகின்ற அனைத்து விதமான சீருடை களையும், ஆடைகளையும் தயாரிப் ்பதற்காக 1961ஆம் ஆண்டு ஆவடியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன், அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் ஆகியோரால் உரு வாக்கப்பட்டது. தொழிற்சாலை கடந்த 60 ஆண்டுகளில் நான்கு முறை ராணுவம் தன்னுடைய சீருடை களுடைய வடிவமைப்பை மாற்றியமை த்துள்ளது.
இந்த நான்கு முறையும் இதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து ராணுவ வீரர்கள் திருப்தியடைகின்ற அளவிற்கு தொடர்ந்து அவர்களுக்கான பல்வேறு ஆடைகளையும், சீருடைகளையும் ஓசிஎப் தொழிற்சாலை உற்பத்திசெய்து வருகிறது. சமீபத்தில் ஒன்றிய அரசு ஆவடி ஓசிஎப் உட்பட 41 தொழிற்சாலை களையும் கார்ப்பரேஷனாக மாற்றிய மைத்தது. இதனை எதிர்த்து தொழிலா ளர்களும், தொழிற்சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒருமுறை ராணுவ வீரர்களின் ஆடை யில் பல்வேறு மாறுதல்கள்செய்து வடிவமைக்க வேண்டும்என்ற ஆலோசனை ராணுவத் தலைமை யகத்தில் நடந்தபோது வழக்கம்போல் ஆவடி ஓசிஎப் தொழிற்சாலை அப்பணி யினை தானாகவே செய்யத் துவங்கி யது.
ஆனால் ராணுவத் தலைமையகம் ஒன்றிய அரசின் ஆடை வடிவமைப்பு நிறுவனம் மற்றும் ஜெசிடி தனியார் துணி ஆலையுடன் இணைந்து புதிய ராணுவ சீருடையை உருவாக்கி அதனை ராணுவ தினத்தன்று (ஜன. 15) ராணுவத் தலைமைத் தளபதி அறிமுகப்படுத்தினார். எதிர்காலத்தில் இச்சீருடைகளை தயாரிப்பதற்கான அனுமதி இனிமேல் ஓசிஎப் தொழிற்சாலைக்கு கிடைக்காது எனவும், தனியாருடன் போட்டி யிட்டுத்தான் இச்சீருடைகளைஉற்பத்தி செய்வதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச் சகமும், ராணுவத் தலைமையகமும் முடி வெடுத்துள்ளது.
இதைக் கண்டித்து தொழிற்சங்கங்கள்ஆவடிஓசிஎப் தொழிற்சாலைக்குத்தான் இப்பணி யினை வழங்க வேண்டும் என போராடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக குடியரசு தினத்தன்று ஆவடி ஓசிஎப் கிருஷ்ணமேனன் சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கத் தலை வர்களும், தொழிலாளர் பிரதிநிதி களும் சங்கமித்து ஓசிஎப் தொழிற் சாலைக்கு புதிய ராணுவ சீருடையை உற்பத்தி செய்வதற்கான நேரடி யான அனுமதியையும், ஒதுக்கீட்டை யும் ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவ தற்கான தொடர் போராட்டங்களை நடத்த உறுதிமொழி எடுத்தனர். அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சம்மேளன பொதுச் ்செயலாளர் சி.ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி நிகழ்ச்சியில், தொமுச பொதுச்செயலாளர்முகமது மீரா, பிஎம்எஸ் தலைவர் சவுந்தர் ்ராஜன், காளிதாசன், ரவி, வில்சன், குமார், வரலட்சுமி, நித்யா, அக்க்ஷயா, பிரேமலதா, தமயந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.