நாகப்பட்டினம், ஜூன் 30- கீழ்வேளூர் தொகுதியில் ஐந்து நாட்களில் 89 ஊராட்சிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கொடுத்த 1468 மனுக்களைப் பெற்று உற்சாகமாய் சுற்றுப் பயணத்தை முடித்திருக்கிறார் சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி. தகிக்கும் வெயில், தளர்வடையா பயணம், தொகுதி முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்களை நேரிடையாக சந்தித்து மனுக்களை பெறும் சுற்றுப்பயணம் கடந்த ஜூன் 26 அன்று கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் துவங்கியது. இப்பயணம் திருப்பூண்டி, கீழப்பிடா கை, காரப்பிடாகை வடக்கு, காரப்பிடாகை தெற்கு, வேட்டைக்காரன் இருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, காமேஸ்வரம், பிரதாபராமபுரம் ஊராட்சி என வந்து வெள்ளியன்று நிறைவடைந்தது. 89 ஊராட்சிகளின் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், இவர்களின் முதன்மை யான கோரிக்கை மனுக்கள், பொது மக்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திற னாளிகள், அரசு ஊழியர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட் டோரின் நியாயமான கோரிக்கைகளை தேடிய பயணம் சிறப்பாக முடிவுற்றது. வழிநெடுக மக்கள் அனைவரும் பேராதரவு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள அளவில்லா நம்பிக்கைக்கு, தெருவெங்கும் பறந்த செங்கொடிகள் சாட்சியாக மிளிர்ந்தன. ஐந்து நாட்களும் அயர்வின்றி மக்களிடம் கோரிக்கை மனுவினை பெற்ற கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கூறுகையில், “இந்த சுற்றுப்பயணத்திற்கு ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரி களுக்கும், செல்லுமிடமெல்லாம் உற்சாக வரவேற்பு கொடுத்த பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் கோரிக்கையாக கொடுத்த தங்கள் மனுவினை பரிசீலித்து, சம்பந்தப் பட்ட அரசு துறைகளுக்கும், மாவட்ட ஆட்சி யர், அமைச்சர்கள் என அனைவரிடமும் கொண்டு சென்று மக்களின் பிரச்சனை களை தீர்த்து வைப்பேன்” என்றார். இப்பயணத் திட்டத்தை முன்னின்று வழிநடத்திய சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிர மணியன், எம்.முருகையன், ப.சுபாஷ் சந்திரபோஸ், டி.லதா, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ், நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ் ஆகியோர் பயண குழுவில் பங்கேற்றனர்.
ஆதி.உதயகுமார்