சென்னை,ஜன.12- தமிழ்நாட்டு வளர்ச்சி, தமிழர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சேதுகால்வாய் திட்டம் குறித்த வழக்கை விரைந்து முடித்து நிறை வேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேர வையில் முதலமைச்சர் கொண்டு வந்த சேதுகால்வாய் திட்டம் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சட்டமன்றகுழுத் தலைவர் நாகை வி.பி. மாலி பேசினார்.
தமிழ்நாட்டின் பொருளா தார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப் பெறச் செய்வதற்கு மிகவும் இன்றிய மையாத திட்டமான சேது கால்வாய் திட்டத்தை உடனடி யாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு இதற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்கும் என்று முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கிறேன்.
ராமர் பெயரால் அரசியல்!
சேது கால்வாய் திட்டம் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கன வாக இருந்தது. இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சி யாக பல ஆண்டுகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்தை ராமர் பாலம் என்று சொல்லி, ராமர் பெயரைச் சொல்லி ஒன்றிய பாஜக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
எது வரலாறு?
கட்டுக் கதைகளையும், கற்பனைகளையும், நம்பிக் கைகளையும் சிலர் வரலாறு என சொல்கிறார்கள். இதை மக்கள நம்ப வேண்டுமென முயற்சிக்கிறார்கள். கட்டுக் கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது.
கற்பனை காவியம்!
ராமாயணம் சிறந்த இலக்கிய படைப்பு. கம்பனின் கவித்திறன் இதில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இது ஒரு கற்பனைக் காவியமாகும். இதை நான் சொல்லவில்லை. ராமாயணம் ஒரு மிகச் சிறந்த அற்புதமான கற்பனைக் காவியம் என மகாத்மா காந்தி சொல்கிறார். ராமாயணத்தில் உள்ள ராமர் என்கிற பாத்தி ரம் மனித ஒழுக்கத்தை கற்பிக்கி றது. எனவே நான் ராமா யணத்தை நேசிக்கிறேன் என்கிறார். ஜவஹர்லால் நேரு ராமாய ணம் ஒரு கற்பனைக் காவியமே எனச் சொல்கிறார். மூதறிஞர் என போற்றப்படுகிற ராஜ கோபாலாச்சாரியார் ராமாய ணத்தை சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் காவியமாக படைத்துள்ளார். அவர் கூட ராமாயணம் ஒரு கற்பனைக் காவியமே எனச் சொல்கிறார். உண்மை வரலாறு வேறு. கற்பனைப் படைப்பு வேறு. கற்பனையையும், நம்பிக்கைகளையும் சிலர் உண்மை வரலாறு எனச் சொல்லி நாட்டில் பெரும் குழப்பத்தை விளைவிக்கின்ற னர்.
அறிவியல்தான் மனித வரலாறு!
“எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என வள்ளூவர் நமக்கு உரைக்கிறார். இவன் சொல்கிறான், அவன் சொல்கிறான் என நம்பாதே. நானே சொன்னா லும் எதையும் நம்பாதே. உன் பகுத்தறிவு எதை ஏற்றுக் கொள்கிறதோ அதை நம்பு என தந்தை பெரியார் சொன்னார். ஆகவே நம்பிக்கை வரலாறு ஆகாது. உண்மைச் சம்பவமே வரலாறாகும். அறிவியல் பூர்வமே மனித வரலாறாகும். ராமாயணத்தைக் கூட சிலர் கம்பராமாயணத்தை ஏற்றுக் கொள்வதில்லை. வால்மீகி ராமாயணத்தைதான் ஏற்றுக் கொள்வோம் எனச் சொல்கின்றனர். இதிலும் கூட அரசியல், வர்ணாசிரம கண்ணோட்டம் இருக்கிறது. சேது கால்வாய் திட்டம் சம்பந்தமாக கலைஞர் கருணா நிதி கூறிய கருத்துகள் சம்பந்தமாக வட இந்தியாவி லிருந்து கண்டனக் குரல் எழுந்தது. ராமரை இழிவு படுத்திய கருணாநிதியின் தலையை சீவி விடுவேன் என ஒருவர் சொன்னார். இதற்கு கலைஞர் சொன்னார், யாரோ அவன் பைத்தியக்காரன், என் தலையை என்னாலேயே சீவ முடியவில்லை. இவன் என் தலையை சீவப் போகிறானாம் பைத்தியக்காரன் என தனக்கே உரித்த அறிவாற்றலோடு பதில ளித்தார் நமது முத்தமிழறிஞர் கலைஞர்.
போராட்டமும்-வெற்றியும்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றிய அமைச்சர் ஒருவர் சேது கால்வாயில் ராமர் பாலம் இருந்ததற்கான அடையாளம் எதுவுமில்லை என்று சொல்லி யிருக்கிறார். இது தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர் போராட்டங்களையும், இயக் கங்களையும் மேற்கொண் டுள்ளது. எனவே, வழக்கை விரைந்து முடித்து தமிழ் நாட்டு வளர்ச்சி, தமிழர்களின் வேலைவாய்ப்பு ஆகிய வற்றை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.