மக்கள் பிரச்சனைகளுக்கான இணைந்து போராடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 மாநில மாநாட்டு பொதுக்கூட்டதில் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய சிபிஐ செயலாளர் இரா.முத்தரசன், " நாட்டைப் பாதுகாக்க சீருடையில் ராணுவவீரர்கள் உள்ளனர். மாநிலங்களில் காவல்துறை சீருடை அணிந்து பாதுகாக்கிறது. இவர்களையும் சேர்த்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை செங்கொடி இயக்கத்தின் செந்தொண்டர் படை செய்து வருகிறது. செந்தொண்டர் படை இன்றைய காலத்திற்கு நிச்சயம் தேவை.
மோடியும்-ஹிட்லரும்
பாஜக அரசு பாசிச நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஹிட்லருக்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதே நிலை தான் பாஜக அரசுக்கு ஏற்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்’சிபிஐயும் பல்வேறு பிரச்சனைகளில் இணைந்தே போராடி வருகிறது. இன்னும் நமது செயல்பாட்டைப் பலப்படுத்துவோம். மக்கள் பிரச்சனைகளுக்காக இணைந்தும் போராடுவோம். தனித்தும் போராடுவோம்.
மத்திய பாஜக அரசு மநுதா்ம ஆட்சியை கையிலெடுத்துள்ளது. சா்வாதிகார ஆட்சியை நடத்துகிறது. மொழிக் கல்வி, சட்டங்கள் வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொள்கை ரீதியாக இணைந்து அதிமுக, பாஜக கூட்டணியை வீழ்த்தியது போல, தேசிய அளவில் கூட்டணி அமைந்திருந்தால் நான்கு மாநில தோ்தல்களிலும் பாஜக வென்றிருக்க முடியாது. தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டுகொள்ளாமல் தோ்தலில் வெற்றி பெற்றவுடன் விலையை உயா்த்தி வருகின்றனா்.
மக்களின் துன்பத்தை பற்றி துளியும் கவலை இல்லாத சா்வாதிகார அரசாக மோடி அரசு செயல்படுகிறது. அதனை எதிர்த்து போராடுகிறோம்.
தமிழகத்திலும் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஆலைத் தொழிலாளர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என பல பிரச்சனைகள் உள்ளன. அனைத்திலும் இடதுசாரிக் கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்து உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.