tamilnadu

img

மாற்றுத் திறனாளிக்கு நீதி கேட்ட தலித் இளைஞர் படுகொலை

திருப்பூர், ஜன. 3- மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நீதி கேட்ட தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாநகராட்சி நெருப் பெரிச்சல் அருகில் வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளை ஞர் சேகர் (45). இவர் செவ்வா யன்று, வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் வரும் வழி யில், தியாகி குமரன் காலனி அடுக்கு மாடி குடியிருப்பு அருகில், இரவு மாற்றுத் திறனாளி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், ஸ்ரீ  ராம், செளகத் அலி மூன்று பேரும் கஞ்சா போதையில் அடித்துக் கொண்டு இருப்பதை பார்த்துள்ளார். அவர்கள் அருகே சென்ற சேகர், மாற்றுத் திறனாளியை பாதுகாக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திர மடைந்த அந்த மூவரும் ஹெல் மெட்டைகொண்டு சேகரை கடுமை யாகத் தாக்கியுள்ளனர்.  மேலும், சாதி யைச் சொல்லிதிட்டி, கீழே தள்ளி ஏறி மிதித்துள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே சேகர் பரிதாபமாகஉயிரிழந்தார்.  இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொடூரத் தாக்குதல் நடத்திய மூவர்  மீதும் ஐபிசி 302, ஐபிசி 294பி, எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு 2015-இல் வழக்குப் பதிவு செய்து சக்தி வேல், ஸ்ரீ ராம் இருவரையும் கைது  செய்தனர்.

தலைமறைவான செளகத் அலியை தேடிவருகின்றனர். கைது  செய்யப்பட்ட இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில்உள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச்செயலாளர் சி.கே.கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றி யக் குழு மகாலிங்கம், தன்ராஜ் ஆகி யோரும் தலித் அமைப்பின் நிர்வாகி களும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று உயி ரிழந்த சேகரின் உறவினர்களுக்கு ஆறு தல் தெரிவித்தனர். மேலும், வழக்கின் நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தனர்.  இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச்செயலாளர் சி.கே. கனகராஜ் கூறுகையில், தலைமறை வான குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள சேகரின் பாதி க்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அது வரையிலும் மாதாந்திர உத விதொகையாக ரூ.10,000/- வழங்க வேண்டும். நெருப்பெரிச்சல் பகுதியில்  பொதுமக்கள் நிம்மதியாக வாழ கஞ்சா, போதை பொருட்கள் விற்ப வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.