tamilnadu

img

மகாராஷ்டிர விவசாயிகள் மீண்டும் நெடும்பயணம்

புதுதில்லி, மார்ச் 14- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் தங்களின் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து,  நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி பத்தா யிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் நீண்ட பயணம் திங்கள் கிழமையன்று தொடங்கியது. வெங்காயம் உட்பட பருத்தி, சோயாபீன்ஸ், பச்சைப் பயறு முதலான விவசாயப் பொருள்களுக்கு கட்டு படியாகக்கூடியவிதத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த நீண்ட  பயணம் தொடங்கியது. வெங்கா யத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளதால் வெங்காய விவசாயி களின் கண்களில் கண்ணீரை வர வழைத்துள்ளதால் இந்த நீண்ட பய ணத்தில் பல்லாயிரக்கணக்கான வெங்காய விவசாயிகள் பெரும் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.

வெங்காயம் உட்பட விவசாய விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகக்கூடிய விதத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சாரக் கட்டண நிலுவைத் தொகைகள் தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சாரம் நாள்தோறும் 12 மணி நேரத்திற்கு விநியோகிக்கப்பட வேண்டும், மழை, வெள்ளத்தால் சேத மடைந்த விளைந்த விவசாயப் பொருள்களுக்கு உரிய இழப்பீடு, இன்சூரன்ஸ் நிறுவனங்களால் அளிக்கப்பட வேண்டும், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழான மானியத் தொகையை 1.40 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் முதலான கோரிக்கைகள் இந்த  17 அம்சக் கோரிக்கைகளில் அடங்கும்.    பேரணிக்கு வந்த விவசாயிகள் மார்ச் 12 அன்று நாசிக் நகரத்தில் திரண்டா ர்கள். அவர்கள் மார்ச் 13 அன்று நக ரத்தில் திண்டோரி சவுக் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றை எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நீண்ட பயணம் துவங்குவதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் மாநில அர சாங்கத்தின் மூத்த அமைச்சர் தாதா  பூசே மற்றும் அகில இந்திய விவசாயி கள் சங்கத் தலைவர்கள் உரையாற்றி னார்கள்.

நீண்ட பயணத்தின் நிறைவில் விவ சாய சங்கத் தலைவர்கள் மாநில முத லமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட் நாவிஸ் ஆகியோரைச் சந்திக்கிறார்கள். நீண்ட பயணத்தை விவசாய சங்கத்  தலைவர்கள் அசோக் தாவ்லே, ஜி.பி. கேவிட் முதலானவர்கள் தலைமை யேற்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.      (ந.நி.)