tamilnadu

காலை, மதிய உணவுத் திட்டம் குறித்து கண்காணிப்புக் கூட்டம்

காலை, மதிய உணவுத் திட்டம் குறித்து கண்காணிப்புக் கூட்டம்

முதல்வரின் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  பின்னர் ஆட்சியர், பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுவரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இத்திட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணித்து ஆய்வு செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், குறைகள் ஏதுமிருப்பின் அதனை உடனடியாக நிவர்த்தி செய்திடுமாறு தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) த.சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.