ஈரோடு, ஜன.23- ஈரோடு கிழக்கு தொகுதி யின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திரு மகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணம டைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், ஆளுங் கட்சியான திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத் தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் அதிகா ரப்பூர்வ வேட்பாளராக ஈவி கேஎஸ் இளங்கோவன் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கி விட்டது. ஈரோடு மாவட்ட திமுக சார்பில் வாக்குச்சாவடி முக வர்கள் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் பணியைத் தொடங் கிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சு.முத்து சாமி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் பணியை யும் தொடங்கியுள்ளார். அமைச்சர் முத்துசாமியுடன் அமைச்சர் கே.என்.நேரு வும் இணைந்து ஈரோடு பகு தியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் வேலையைத் தொடங்கியுள்ளனர். பரபரப்பான இடைத்தேர் தல் களத்தில் திமுகவின் முன்னணி தலைவர்கள் இப்போதே தேர்தல் பணி களைத் தொடங்கிவிட்ட தால், திமுக கூட்டணிக் கட்சி யினர் உற்சாகத்தில் உள்ளனர்.