சென்னை, செப். 2- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவி யல் பல்கலைக்கழகம், வேளாண் அறிவி யல் தமிழ் இயக்கம் (புதுதில்லி) சார்பில் 7ஆவது வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வெள்ளியன்று (செப். 2) சென்னையில் துவங்கியது. மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து, தமிழ்வழி 175ஆம் நூலை வெளியிட்டு, துணை வேந்தர்களுக்கு, முனைவர்களுக்கு, ஆராய்ச்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. தமிழ்மொழி மென்மேலும் சிறப்புகளை பெற வேண்டும் என்பதற்காக அறிஞர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரு கிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பலர் தமிழை உயிர் மூச்சாக வளர்த்தெடுத்தார்கள். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல் காப்பியத்தை எளிய தமிழில் வழங்கியவர் கலைஞர் கருணாநிதி. அவரது சீரிய முயற்சியால் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. இயல், இசை நாடகம் மட்டுமல்லாமல் அறிவியல் தமிழி லும் கவனம் செலுத்த முதல்வர் அறிவுறுத்தி யுள்ளார்.
வேளாண் அறிவியல் இயக்கம் மூலம் பல தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. இவற்றிற்கு மீன்வளப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. வேளாண், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய தொழிலாகும். இதற்காக பல்கலைக்கழகங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். விருது பெற்ற அனைவரும் மென்மேலும் தமிழ் வளர்வதற்கு உறு துணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் பா.டென்சிங் ஞானராஜ் பொருண்மையுரை வழங்கினார். “தமிழால் இயலும் மீன்வளயியல்” என்ற தலைப்பில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக (நாகப்பட்டினம்) துணைவேந்தர் கோ.சுகுமார், “தமிழால் இயலும் பயிரியல்” என்ற தலைப்பில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம் புத்தூர்) துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, “தமிழால் இயலும், கால்நடையியல்” என்ற தலைப்பில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (சென்னை) துணை வேந்தர் க.ந.செல்வக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக சென்னை கால்நடை மருத்து வக் கல்லூரி முதல்வர் இரா.கருணாகரன் வரவேற்றார். வேளாண் அறிவியல் இயக்கத்தின் தலைவர் மு.முத்தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். இந்த மாநாடு வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.