நேபாள்தேவ் பட்டாச்சார்யாவிற்கு தில்லியில் நினைவேந்தல் கூட்டம்
இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் நேபாள்தேவ் பட்டாச்சார்யா கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், பட்டாச்சார்யாவின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் வகையில் தில்லி கேனிங் லேன் பகுதியில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் நிலோத்பல் பாசு, விஜூ கிருஷ்ணன், அருண் குமார், மூத்த தலைவர் ஹன்னான் மொல்லா, இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர்கள், சமூக ஆர்வலர் சோஹைல் ஹஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேபாலள்தேவ் பட்டாச்சார்யாவின் தொலைநோக்கு தலைமைப் பணி, அன்பான மனப்பாங்கு மற்றும் கலாச்சார உணர்வுகளை நினைவுகூர்ந்தனர்.