tamilnadu

img

மீனாட்சியம்மன் கோவில் உள்பட 5 கோவில்களில் மருத்துவ மையங்கள்

சென்னை,டிச.2- பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 கோவில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற் கான இந்து சமய அறநிலை யத்துறையின் மானியக்கோரிக் கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏற்கெனவே 10  கோவில்களில் மருத்துவ  மையங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.  இந்தாண்டு மேலும்  5 கோவில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக் கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன், அழகர் கள்ளழகர் கோவில்கள், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பண்ணாரி பண்ணாரியம்மன் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மையங்க ளில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்து வப் பணியாளர்கள் தேர்வு  செய்யப்பட்டு பணியமர்த்தப் பட்டுள்ளனர். முதலுதவி மற்றும்  அடிப்படை சிகிச்சை மேற்கொள் வதற்கு தேவையான ஆக்சிஜன்  சிலிண்டர்கள், ரத்த அழுத்தமானி,  படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக இருக் கும். இதற்கான செலவினங் கள் அந்தந்த கோவில்களின் நிதியிலிருந்து மேற்கொள்ளப் படும். நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் பலர் கலந்துகொண்டனர். மதுரையில் மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், மேயர், மாவட்ட ஆட்சியர்  உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.