கோவை, டிச.31- அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாட்டின் ஜோதி பயணம் எழுச்சி யுடன் கோவையிலிருந்து வெள்ளி யன்று துவங்கியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாடு ஜனவரி மாதம் 6,7,8,9 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டிற்கான தியாகிகள் நினைவு ஜோதிப் பயணம் வெள்ளியன்று கோவை-துடியலூர் பேருந்து நிலை யம் முன்பு மாதர் சங்க மாவட்டப் பொரு ளாளர் சி.ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது. தியாகிகள் ஜோதியை மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ராஜலட்சுமி எடுத்துக் கொடுக்க, கோவை மாவட்டப் பொருளாளர் ஜே. உஷா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், கோவை மாவட்டச் செயலாளர் டி.சுதா பேசியதாவது, கோவை-பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து இச்சிறுமிக்கு நீதிமன்றம் மூலம் போராடி நீதியைப் பெற்றுத் தந்தோம். இதேபோல் பொள்ளாச்சி யில் இளம் பெண்களின் மீதான கொடு மைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட் டத்தை நடத்தியுள்ளோம் என தெரி வித்தார்.
மாதர் சங்க தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஆ.ராதிகா பேசுகையில், பெண்களின் மீதான வன்முறைகள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிற நம்மு டைய அமைப்பின் பணிகள் இன்னமும் தீவிரமடைய வேண்டி உள்ளது. பெண் கள் வாழ பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா பரிதாப நிலை யில் உள்ளது என தெரிவித்தார். சங்கத்தின் செயலாளர் பி.சுகந்தி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத் தில் பங்கேற்ற கேப்டன் லட்சுமியின் வரலாற்றை தாங்கி நிற்கின்ற இயக் கம் ஜனநாயக மாதர் சங்கம். பெண் களின் உரிமைகளுக்காக இன்னும் போராடி வருகிறோம். சுதந்திரப் போராட்டத்தின் பக்கம்கூட திரும்பிப் பார்க்காத மோடி வகையறாக்கள், இந் திய சுதந்திர வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கின்றன. இதன் தொடர்ச்சி தான் கர்நாடக மாநில பாடப் புத்தகங்க ளில் சாவர்க்கரின் வரலாற்றை திரித்து எழுதி நம்ப வைக்கிறது. மாறாக, உண்மை வரலாறு என்பது மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை மறைக்கிறது.
மற்றொரு பக்கம் அகண்ட பார தத்தை உருவாக்குவோம் என மதுரை ஆதீனம் தீர்மானம் நிறைவேற்றுகிறார். அகண்ட பாரதத்தில் பெண்கள் காவல் துறையினராக முடியுமா? என பெண் செய்தியாளர் கேள்விக்கு, அதெப்படி முடியும்? என சற்றும் யோசிக்காமல் ஆதீனம் பதிலளிக்கிறார். மேலும், சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட கத்தில் நடித்து மக்களை திரட்டியவர் கே.பி.ஜானகியம்மாள். போராட்டக் காலங்களில் சிறையிலடைக்கப்பட்ட பலர் காவல்துறையினருக்கு அஞ்சி மரியாதை செய்கையில், ஜானகியம் மாள் மட்டுமே அவர்களை கண்டு அஞ்சாமல் சென்றார். இதனை காவல்துறையினர் கேட்க, நான் தேசத்தின் சுதந்திரத்திற்கு போரா டிய போராளி, நீ கைக்கூலி உனக்கு எதற்கு நான் மரியாதை செலுத்த வேண் டும் என தெரிவித்தார். அவரின் இயக் கம் தான் நம்முடைய மாதர் சங்கம். தற்போது புதுக்கோட்டை மாவட்டத் தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக முதலில் களத்தில் நின்றது மாதர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், இந்திய தொழிற் சங்க மையத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.கிருஷ்ணா மூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் மாநில இணைச்செயலாளர் யூ.கே.சிவஞானம் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.