மணல் குவாரியால் வாழ்வாதாரம் அழியும் அபாயம்
காப்பாற்றும்படி ஆட்சியரிடம் மணல்மேடு கிராம மக்கள் மனு
மயிலாடுதுறை, மே 17- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், காரைமேடு ஊராட்சி, மணல்மேடு கிரா மத்தில் அமைக்கப்பட்டுள்ள மண் குவாரியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதோடு ஆபத்தான நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளி யன்று புகார் மனு அளித்தனர். கிராம மக்கள் கையொப்ப மிட்டு அளித்துள்ள அம்மனு வில், உப்பனாற்று கரையிலி ருந்து 10 அடி தூரத்தில் ஓலப் பள்ளம் ஓடையில் தென்னலக் குடியை சேர்ந்த ரெங்கதுரை என்பவர் மண்குவாரி அமை த்து 20-லிருந்து 25 அடி ஆழம் வரை மண் எடுத்து வெளியே விற்பனை செய்து வருகிறார். இதை தொடர்ந்து அனுமதித்தால் பக்கத்தில் உள்ள விளை நிலங்கள் பாதிக் கப்படும். மழைக் காலத்தில் ஆற்றுக் கரை எளிதாக உடை படும். விவசாய நிலங்கள் மூழ்கும். ஆழமாக மணல் தோண்டுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நீரும் உப்பாக மாறும். மேய்ச்சலுக் குச் செல்லும் கால்நடைக ளும், பொதுமக்களும் பள்ளத் தில் வீழ்ந்து விபத்து ஏற்படும். கிராமத்தை பாதுகாக் கும் பொருட்டு, சீர்காழி கோட் டாட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஒன்றிய, மாநில அரசுகள் விதித்துள்ள மண்குவாரி விதி முறைகளை பின்பற்றாமல், எங்கள் கிராம வாழ்வாதாரத்தை பறிக்கும் மண்குவாரியை தடுத்து நிறுத்தி, எங்கள் வாழ்வுரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.பி. மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் அசோகன், காரைமேடு கிளை பொறுப்பா ளர் மாரியப்பன், கிராம தலை வர்கள், கிராம மக்களுடன் சென்று மனு அளித்தனர்.