tamilnadu

img

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலைச்சேரிபட்டி உயர்பாலம், ஒத்தக்கடை சந்திப்பில் அணுகுசாலை அமைத்திடுக! - சு.வெங்கடேசன் எம்.பி மனு!

வலைச்சேரிபட்டி உயர்பாலம், ஒத்தக்கடை சந்திப்பில் அணுகுசாலை அமைத்திட வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை செயலாளரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு;
சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை வரும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இரண்டு முக்கிய சந்திப்புகளான வலைச்சேரிப்பட்டி சந்திப்பு, ஒத்தக்கடை சந்திப்பு ஆகிய இரு சந்திப்புகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் கருங்காலக்குடி சந்திப்பிற்கு அடுத்தபடியாக அதிகமான விபத்துகள் நடைபெறும் இடங்களாக அவை இருக்கின்றன.
மேலும் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலைச்சேரிபட்டி சந்திப்பானது தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, சிறுகுடி ஆகிய கிராம மக்கள் பயணம் செய்யும் பகுதியாகும். அதுபோல அந்த சந்திப்பு கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி, காரைக்குடி செல்லும் சாலைகளுக்கான வழியாகவும் உள்ளது. எனவே வலைச்சேரிபட்டி சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைத்து விபத்துகளை தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன்.
இதைப்போன்று ஒத்தக்கடை சந்திப்பும் மதுரையின் புகழ்மிக்க ஆன்மிகத்தலங்களான திருமோகூர், அழகர்கோவில், திருவாதவூர் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான வழியாக உள்ளது. மதுரை நகருக்குள் நுழைவதற்கான வாயிலாகவும் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்குக் இடமாக இருக்கிறது. எனவே ஒத்தக்கடை சந்திப்பின் அருகில் அருகில் ராஜகம்பீரம் இணைப்பிடத்தில் அணுகுசாலைகளை அமைப்பது இத்தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பாக அமையும். எனவே ஒத்தக்கடை சந்திப்பில் திருமோகூர் - ராஜகம்பீரம் சாலை இணைப்பில் அணுகுசாலைகளை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். 
மேற்கண்ட உயர்மட்ட பாலத்தினையும் , ஒத்தக்கடை அணுகுசாலையையும் அமைத்திட வேண்டுமென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்களுக்கு துறையின் செயலாளர் திரு. கிரிதர் ஆரமனே அவர்களிடம் நேரில் மனு அளித்தேன்.


விபத்துகளை குறைக்கும் நோக்கில் நான் வலியுறுத்திய மேலூர், கருங்காலக்குடி மேம்பாலத்தினை உடனடியாக பரிசீலித்து நிதி ஒதுக்கியதைப் போல் இவ்விரண்டு கோரிக்கைகளின் நியாயத்தையும் உணர்ந்து விரைந்து பரிசீலித்து நல்ல முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.