tamilnadu

தொகுதி மறுவரையறையில் மக்களின் பாதுகாவலர்களாக ஒன்றிணைவோம்!

தொகுதி மறுவரையறையில் மக்களின் பாதுகாவலர்களாக ஒன்றிணைவோம்! 

 6 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

சென்னை, மார்ச் 7 -  தொகுதி மறுவரையறை தொடர்பாக 6 மாநில முதலமைச்சர் களுக்கும், முன்னாள் முதலமைச்சர் கள் மற்றும் பல்வேறு முக்கிய கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  2026-ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து ஆலோசிக்க சென்னை  தலைமைச் செயலகத்தில் மார்ச்  5 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

தண்டனையாக அமையக் கூடாது!

 இந்தப் பின்னணியில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதி யுள்ள கடிதத்தில், “இந்தியாவில் 1952, 1963 மற்றும் 1973-ஆம் ஆண்டு களில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப் பட்டது. எனினும், 1976-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42-ஆவது திருத்தத்தின் படி, மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னரும், 84-ஆவது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026-க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.  “2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமான தால், தொகுதி மறுவரையறை 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட முன்ன தாகவே அது நடைபெறக்கூடும் என தற்போது தெரியவருகிறது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

சிறந்த நிர்வாக திறனுக்கு தண்டனையா?

 “தொகுதி மறுவரையறை என் பது தங்கள் மக்கள் தொகையைக்