tamilnadu

img

அரசு மற்றும் புரட்சி குறித்து லெனின் எழுதிய மூன்று படைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சி - - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் -

அரசு மற்றும் புரட்சி குறித்து லெனின் எழுதிய மூன்று படைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய சித்தாந்த கருத்தியலை உருவாக்க லெனினுக்கு வழி வகுத்தன. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அணிதிரட்டும் அமைப்பாளராகவும் அந்த புரட்சியின் தலைவராகவும் கட்சி இருக்க வேண்டும் என்பதுதான் அந்த சித்தாந்தம். மார்க்சிய சித்தாந்தத்தை அடித்தளமாக  கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி “புது வகையான கட்சி” என லெனின் அழைத்தார். இதன் மூலம் இந்த கட்சி ஏனைய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ கட்சிகளிலிருந்து மாறுபட்டது என்பதை நிலைநாட்டினார்.