ஆர்.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, “காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்; ஆக்கிர மிப்பு பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளி யேற வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரே லுக்கு ஆதரவாக உள்ள ஏகாதிபத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவு திரும்பப் பெற வேண்டும், இந்தியா ஆயுத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும், பாலஸ்தீன ஆதரவு நிலை யை எடுக்க வேண்டும். போர் நிறுத்தத் திற்கு சர்வதேச சமூகம் கூடுதல் அழுத்தம் தர வேண்டும்” என்றார். “ஏகாதிபத்தியம் உள்ள வரை போர் இருக்கும். எனவே, ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டும். இடதுசாரிகளின் திசையில் மக்கள் திரண்டால் எதுவும் சாத்தியமே!” என்றும் அவர் குறிப்பிட்டார். இரா. முத்தரசன் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசுகையில், “போரை நிறுத்தச் சொன்ன ஐ.நா.பொதுச் செய லாளரை தனது நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கணக்குதான். உயிரி ழப்புகள், பாதிப்புகள் மேலும் அதிக மாக இருக்கும். விஷம் பரவுவதுபோல் இஸ்ரேலின் தாக்குதல் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. ஏகாதிபத்தியம் அமைதியை விரும்பாது. ஆயுத விற்பனைக்காக போரை நடத்திக் கொண்டே இருக்கும். இதனால் மக்க ளின் வாழ்க்கை கெடும். எனவே, அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநா யக சக்திகளும் போருக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என்றார். பழ. ஆசைத்தம்பி சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி பேசு கையில், “சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்தச் சொல்லி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இஸ்ரேல் அதை மதிக்க வில்லை. ஒன்றிய அரசு பாலஸ்தீன ஆதரவு நிலையிலிருந்து, இஸ்ரேல் ஆத ரவு நிலையை எடுத்துள்ளது. இடது சாரிகள், ஜனநாயக சக்திகளின் அழுத்தத் தால் ஒன்றிய அரசு தனது நிலைபாட்டை சற்று தயங்கி அமல்படுத்துகிறது. வெளி யுறவுக் கொள்கைகளில், இந்திய மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. இதை ஒன்றிய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் க. கனகராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, மாநி லக்குழு உறுப்பினர் ஏ. பாக்கியம், சிபிஐ தலைவர்கள் சி.எச். வெங்கடாச் சலம், பா. கருணாநிதி, எஸ்.கே. சிவா, சிபிஐ (எம்எல்) லிபரேசன் தலைவர்கள் இரணியப்பன், அதியமான் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.