சென்னை, ஜன. 27- திரைப்பட சண்டைக் காட்சிகளில் புதுமை யைப் புகுத்தியவரும் தொழிலாளர்களுக் காகத் தனது இறுதி மூச்சு வரை போராடி யவருமான தோழர் ஜூடோ ரத்தினம் மறைந்தார். அவருக்கு வயது 94. கலைமாமணி விருதுபெற்ற சண்டை பயிற்சியாளரும், நடிகருமான ஜூடோ கே.கே.ரத்தினம் குடியாத்தத்தில் வியாழ னன்று (ஜன. 26) மாலை காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
அவரது உடல் குடியாத்தத்திலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, வட பழனியில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சண்டைக் கலை ஞர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்க அலு வலகத்தில் வெள்ளியன்று (ஜன. 27) அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆலைத்தொழிலாளியாக....
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், தோழர் ஜூடோ ரத்தினம் திரையுலகத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக கொடிகட்டிப் பறந்தவர். குடியாத்தத்தில் பிறந்து ஆலைத் தொழி லாளியாக பணிபுரிந்து, தொழிலாளர் களுக்கு ஆதரவாகப் போராடிப் பணி நீக்கம் செய்யப்பட்ட பின், சென்னை வந்தார். முகவை ராஜமாணிக்கம் அவரை திரைத் துறையில் நடிப்பதற்கு ஏற்பாடு செய்தார். துவக்கத்தில் நடிகராக பணியைத் துவங்கிய அவர், எம்.ஆர்.ராதா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒரு திரைப்படத்திற்குச் சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் அவரை அனைவரும் சண்டை பயிற்சியாளராகப் பயன்படுத்திக் கொண்டனர்.
முன்னணி நடிகர்களுக்கு பயிற்சி
தமிழ் திரையுலகில் ஜெய்சங்கர், ரஜினி காந்த், கமலஹாசன், என பல தலைமுறை யினருடன் சண்டை பயிற்சியாளராக பணி யாற்றியுள்ளார். தமிழ் திரையுலகில் ஜூடோ கலையை, வடிவத்தை என்பதை அறிமுகப் படுத்தியவர் ரத்தினம். தோழர் ஜூடோ ரத்தினம் தனது இறுதி மூச்சு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பின ராகச் செயல்பட்டார். ஸ்டுடியோவிற்கு செல்லும் போது கூட கட்சிக் கொடியுடன் தான் செல்வார். அவர் பிறந்த ஊரில் ஒரு திருமண மண்டபம் கட்டி ஏழை மக்களுக்கு உதவி வந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய 2 மகன்கள் ஸ்டண்ட் மாஸ்டராக சென்னையில் பணிபுரிகின்றனர். ஒரு மகன் கல்கத்தாவில் பணிபுரிகிறார். அவ ரது குடும்பமே திரையுலகில் பணிபுரிந்து வருகிறார்கள். அவரது மறைவிற்கு கட்சியின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலியையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
கம்யூனிஸ்ட்
கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், அவரது இறப்பு கட்சி உறுப்பினர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக திகழ்ந்தவர். சாதாரண உழைப்பாளி குடும்பத்தில் பிறந்து, உழைப்பாளியாகத் தனது பணியைத் துவங்கி, தமிழ் திரையுல கில் சிறந்த சண்டை பயிற்சியாளராக திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினார்.. பெப்சி அமைப்பை ஸ்டண்ட் நடிகர் சங்கத்தை உருவாக்குவதில் அவருடைய பங்கு மகத்தானது. அவர் மறைந்தாலும், அவர் கட்சிக்கும், திரையுலகிற்கும் ஆற்றியுள்ள பணி என்றென்றைக்கும் நிலைத் திருக்கும். மிகவும் எளிமையானவர், சிறந்த பண்பாளர், ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்தவர். யார் சென்றாலும் கட்சி குறித்து விவாதிப் பார். அவர் திரையுலகின் உச்சிக்குச் சென்ற நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றி னார். அவருடைய மகன்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளனர். தோழர் ஜூடோ ரத்தினத்திற்கும், அவரை பிரிந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தின ருக்கும், திரையுலகிற்கும் கட்சியின் மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த அஞ்சலியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
திரை உலகினர் அஞ்சலி
தோழர் ரத்தினம் உடலுக்கு மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், எடிட்டர் லெனின், திரைக்கலைஞர்கள் ரஜினி காந்த், சத்யராஜ், ராதா ரவி, கார்த்திக், மனோபாலா உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களும், நடிகர்களும், சண்டை பயிற்சியாளர்கள் அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், தீக்கதிர் சென்னை பதிப்பு முன்னாள் மேலாளர் சி.கல்யாணசுந்தரம், தமுஎகச மாநிலப் பொருளாளர் சைதை ஜெ, நிர்வாகிகள் மயிலை பாலு, மணிநாத், சாலகுமார், கம லக்கண்ணன், பகத்சிங் கண்ணன், மாற்று ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.காளீஸ்வரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
குடியாத்தத்தில் இன்று இறுதிநிகழ்ச்சி
அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் குடியாத்தத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் சனிக்கிழமை (ஜன. 28) மாலை 3 மணியள வில் அவரது இறுதி நிகழ்ச்சிநடைபெறுகிறது.