tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல்!

பல ஆயிரக்கணக்கானோர் கைது

சென்னை, ஜூலை 16 - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரி யில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வலி யுறுத்தியும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை  பார்க்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் நடைபெற்ற இந்த  ரயில் மறியல் போராட்டங்களில் பல ஆயிரக் கணக்கான விவசாயிகள் பங்கேற்றுகைதாகினர். தமிழகத்திற்கு, 2024 ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை சுமார் 5 டிஎம்சி தண்ணீரைத் தான் கர்நாடகம் திறந்துள்ளது. இந்நிலையில் டெல்டா  மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி செய்ய  முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர்.  தற்போது கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப்  பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் கபினி அணை நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை உட்பட அனைத்து அணைகளிலும் 85 சதவிகிதம் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. மே 11  அன்று கூடிய காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு,  தமிழகத்திற்கு நாள் தோறும் 1 டிஎம்சி (சுமார்  11 ஆயிரம் கன அடி) தண்ணீர் திறக்க உத்தர விட்டும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, வெறும் 8 ஆயிரம் கன அடி மட்டுமே நீர்  திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது  ஒரு போக சம்பா சாகுபடியையாவது செய்யலாம் என காத்திருந்த விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில், கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மற்றும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான கர்நாடக அரசின் செயலை மவுனமாக வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் அலட்சியத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் டெல்டா மாவட்டங்களில் செவ்வாயன்று ரயில் மறியல் நடைபெற்றது.

தஞ்சாவூர் 

இதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், முன்னாள் எம்எல்ஏ (சிபிஐ) கே. உலகநாதன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா விரைவு ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். அவர்களில் 12 பெண்கள் உள்ளிட்ட 76 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பி. டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஐ) மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் மறியலில் பங்கேற்று, திருச்சி - காரைக்குடி ரயிலை மறித்தனர். 

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் நடந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ். சாமிநாதன், எம்.ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இங்கு திருவாரூர் - காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சிராப்பள்ளி

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், விவசாயிகள் சங்க (சிபிஐ) மாநகர் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் ஊர்வலமாக வந்து ஜங்சன் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற விவசாயிகளைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து அவர்கள் ஜங்சன் ரயில் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் முகமது அலி, இந்திரஜித் (சிபிஐ) உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

மயிலாடுதுறை 

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகையில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.