மதுரை, டிச.6- ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழ கம் சார்பில் வழிபாட்டுத் தலங்கள் பாது காப்புச் சட்டம் 1991-ஐ நடைமுறைப் படுத்த வலியுறுத்தி வழிபாட்டுத்தலங் கள் பாதுகாப்பு தின கருத்தரங்கம் மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள சேட் மகாலில் டிசம்பர் 5 திங்களன்று நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு தலைவர் செ. ஹைதர் அலி தலைமை வகித்தார். பக்ரு தீன் அலி அமித்ஹா வரவேற்றார். இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மணியமுதன், தமிழ்ப்புலிகள் கட்சி மாநில தலைவர் நாகை. திருவள்ளு வன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலை வர் மீ. தா. பாண்டியன், அண்ணா திரா விட மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பசும்பொன் பாண்டியன் மற்றும் இஸ்லா மிய அமைப்பினர் உரையாற்றினர்.
க.கனகராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ் ஆற்றிய உரையில், “தமிழகத்தில் பல்வேறு ஊடகங்கள், பத்திரிகைகளில் ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவான பலரை பாஜக கொண்டுவந்துள்ளது. அவர் கள் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை முழு மையாக தமிழகத்தில் ஊடகங்கள் வாயிலாக பரப்ப நினைக்கின்றார்கள். அன்றைக்கு இந்தியாவிற்கு பூரணம் சுதந்திரம் வேண்டும் என்று கூறியவர் கம்யூனிஸ்ட்டான மௌலானா ஹஸ்ரத் மொகானி. இப்படி எண்ணற்ற இஸ்லா மியர்கள் இந்த நாட்டின் விடுதலைக் காக பாடுபட்டுள்ளனர். இஸ்லாமி யர்கள் அரசின் இட ஒதுக்கீடுகளை சரி யாக பயன்படுத்திக்கொள்ள வேண் டும். அரசு உயர் பதவிகளில் உரிய விகி தத்தில் இஸ்லாமியர்கள் இல்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வளர் வது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதி ரானதாக கருதக்கூடாது. அது கிறிஸ்த வர்களுக்கு, இந்துக்களுக்கு என அனை வருக்கும் எதிரானதுதான். ராமர் பிறந்த இடம் என்று கூறி பாபர் மசூதியை இடித் தார்கள். நாளை குலதெய்வ வழி பாட்டினை தடுப்பார்கள். எனவே நம் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு இஸ்லா மியர்கள் தனியாக நின்று போராடி னால் போதாது. பாஜகவுக்கு எதிராக உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும்” என்று கூறினார்.
இரா.முத்தரசன்
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், பாபர் மசூதி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, மக்களவையில் 1991 வழிபாட் டுத்தலங்கள் தொடர்பான சட்டம் இயற் றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 1947-க்கு முன்னர் இந்தியாவில் அனைத்து வழி பாட்டுத் தலங்களும் எப்படி இருந்த னவோ அவை அப்படியே இருக்க வேண்டும். அவற்றில் எந்தவித மாற்றங் களும் செய்யக்கூடாது என்று தெரி விக்கப்பட்டு மக்களவையில் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்ப டையில் மத வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்கை நீதிமன்றங்க ளும் விசாரிக்கக்கூடாது. ஆனால் தற் போதுள்ள பாஜக அரசும், நீதிமன்றங்க ளும் அந்த சட்டத்தை மீறி வருகின்றன. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை யாரும் நினைக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இவர்கள் கர சேவை என்ற பெயரில் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்தார்கள். இது போன்ற தீயசக்திகளை நாம் வளர விடக்கூடாது. நாம் அனைவரும் ஓரணியில் இருந்து மதவெறி பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகளை அகற்று வோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நாகை.திருவள்ளுவன்
தமிழ்ப்புலிகள் கட்சி மாநில தலை வர் நாகை .திருவள்ளுவன் பேசுகை யில், இன்றைக்கும் மதத்தின் பெயரால் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் மதக்கல வரங்களை தூண்டி வருகிறது. இந்தியா வில் உள்ள பல கோவில்கள், சமண, பௌத்த கோவில்களை இடித்துத்தான் கட்டியுள்ளனர். அவற்றையெல்லாம் சமண, பௌத்த கோவில்கள் இருந்த இடம் என்று கூறி இன்றைக்கு யாரும் இடிக்கின்றார்களா? 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கூறி னார்.