tamilnadu

img

மாநில அரசுகள் தலையாட்டி பொம்மைகளா?

புதுச்சேரி, ஜூன் 15 - மாநில அரசுகளை தலையாட்டி பொம்மையாக நடத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு 2024 நாடாளு மன்ற தேர்தலில் தூக்கி எறியப்படும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் கோரிக்கை விளக்க - நிதி  அளிப்பு பொதுக்கூட்டம் சாரம்  ஜீவானந்தம் சிலை எதிரே செவ்வா ய்க்கிழமை இரவு நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் புதுச்சேரி மாநிலசெயற்குழு உறுப்பினர் என். கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் இரண்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்று முதல்வர் ரங்கசாமி ஆட்சி; மற்றொ ன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆட்சி. புதுச்சேரி சட்டப்பேர வையில் அறிவித்த திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வர வில்லை.  என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ‘இரட்டை எஞ்சின்’  ஆட்சி என்று தம்பட்டம் அடித்தனர். இந்தியாவிலேயே ரேஷன் கடை திறக்காத மாநிலம் என்றால் அது  புதுச்சேரிதான்.

இது தான் இரட்டை எஞ்சின் ஆட்சியின் லட்சணம். மாநில அரசுகளை தலையாட்டி பொம்மையாக வைத்துக் கொள்ள மோடி அரசு துடிக்கிறது.  மாநில  அதிகாரங்களை பறித்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுசெல்கிறது. மருத்துவக் கல்லூரிக்கான இடங்களை நிரப்பு வதற்குகூட மாநில அரசுக்கு உரிமை யில்லை என்கிறது. இதேநிலை நீடித்தால்  10ம் வகுப்பிற்கான இடங் களைக் கூட ஒன்றிய அரசுதான் நிரப்பும் என்ற அறிவிப்பு கூட வரலாம். இந்தியாவின் அடுத்த தலை முறையான வளர் இளம் குழந்தை களுக்கு அங்கன்வாடி மூலம் நாள் ஒன்றுக்கு 80பைசா செலவு செய்யும் ஒன்றிய அரசு, கூடுதலாக 20 பைசா உயர்த்திட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நிதி அமைச்சரிடம் வலி யுறுத்தினர். அந்த 20 பைசாவை உயர்த்த  மறுத்த மோடிஅரசு, 200  மிகப்பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கடந்த 9 ஆண்டு களில் ரூ.11 லட்சத்திற்கும்  மேலாக வரிச் சலுகை செய்துள்ளது; வராக் கடன் என்று தள்ளுபடி செய்துள் ளது. இவர்கள் தான் ஊழலற்ற அரசு  என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் அணிவகுப்பு

வருகின்ற ஜுன் 26 அன்று பாட்னா வில் எதிர்கட்சிகள் அனைத்தும் அணிவகுத்து, மோடி அரசை எதிர்த்து போராட்டங்களை அறி விக்க உள்ளனர். 2024ல் பாஜக அரசை வீழ்த்துவோம் என்ற அறி விப்பை, இடதுசாரிகள், திமுக  உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள் ளன. இந்த பின்னணியில்தான் அம லாக்கத்துறையை ஏவி மிரட்டும் வேலையை மோடி அரசுசெய்கிறது.  இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.1லட்சம் நிதி

முன்னதாக பி.ஆர்.நினைவு கட்டிடத்திற்கான நிதி ரூ.1லட்சம் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப் பட்டது. மாநிலம் முழுவதும் வசூலித்த தொகையை இடைக்குழு செயலாளர்கள் வழங்கினார்கள். ஜூன் 30 ஆர்ப்பாட்டம்  புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் பேசுகையில், “மாநில என்.ஆர்.காங்கிரஸ், பாஜக  கூட்டணி அரசு அறிவித்த திட்டங் களை நிறைவேற்றக்கோரி ஜூன் 30 ஆம் தேதி புதுச்சேரி முழுவதும் கொம்யூன் வாரியாக பிரச்சாரம் செய்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம்  நடத்தப்படும்” என்று அறிவித்தார். இப்பொதுக் கூட்டத்தில்  மாநில செயற்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், எஸ்.ராமச்சந்திரன், தமிழ்செல்வன், சீனுவாசன், சத்தியா, கலியமூர்த்தி, இடைக் கமிட்டி செயலாளர்கள் மதிவாணன், ராம்ஜி, அன்புமணி,சரவணன், ராம மூர்த்தி, தமீம் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.