tamilnadu

img

உயர்கல்வி மன்ற உறுப்பினராக இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமனம்

உயர்கல்வி மன்ற உறுப்பினராக இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின், கல்வி மேம்பாட்டுக்காக புதிய திட்டங்களை வகுப் பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடை முறைகள் ஒழுங்குபடுத்து வது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதி முறைகளை உருவாக்குவது உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளை மேற்கொள்ள 1992-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வி மன்றம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த உயர்கல்வி மன்றத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பன்னீர்செல்வம் (தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர்), வீர முத்துவேல் (இஸ்ரோ விஞ்ஞானி), முரளிதரன் (தனியார் தொழில்நுட்ப நிறு வனம்), சந்திரசேகர் (மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர்) ஆகியோர் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.