tamilnadu

img

இஸ்ரேலே, பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்து! சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலே, பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்து! சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனர்கள் மீது குண்டுகளை வீசியும், ஐ.நா. அனுப்பும் உணவைக் கூட தடுத்து, பெண்கள், குழந்தைகள் உட்பட பல லட்சம் பேரை, பட்டினியில் தள்ளியும் இஸ்ரேல் கொடூர இனப்படுகொலையை நடத்தி வருகிறது. இதனைக் கண்டித்தும், இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டை ஒன்றிய மோடி அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம்எல் லிபரேசன் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் செவ்வாயன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐஎம்எல் லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர். வேல்முருகன் (தென்சென்னை), எம். ராமகிருஷ்ணன் (வடசென்னை), ஜி. செல்வா (மத்தியசென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.