தமிழ்நாட்டில் 2017 இல் 18 யானை வழித்தடங்கள் இருப்பதாக வனத்துறையி னர் அறிவித்தனர். 2023 இல் எடுக் கப்பட்ட கணக்கெடுப்பில் 20 யானை வழித்தடங்கள் இருப்ப தாக கூறினார்கள். தற்போது தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 42 யானை வழித்தடங்கள் என்று வனத்துறையினர் 29.04.2024 அன்று அறிவித்துள்ளனர். இது தொடர்பான பிரச்சனையில் ஆறு நாட்கள் மட்டுமே கருத்து கூறுவதற்கு அவகாசம் கொடுத் தது வனத்துறை. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், தென் காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் புதிய யானை வழித்தடங்கள் என்று வனத்துறை அறிவித்துள்ள பகுதியில் விவ சாய நிலங்கள், தேயிலை தோட் டங்கள், நெடுஞ்சாலைகள், பொ துப்பணித்துறைக்கு சொந்தமான நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன.
2023 இல் கண்டறியப்பட்ட 20 யானை வழித்தடங்களை 42 ஆக விரிவுபடுத்தி அறிவித்துள்ள வனத் துறை, யானை வழித்தடங்களில் உள்ள விவசாய நிலங்கள், மனித வாழ்விடங்கள், தேயிலை தோட்டங் களை கையகப்படுத்தி அங்குள்ள மக்களை அகற்றிட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். பல இடங்களில் சர்வே செய் யும் பணிகளை துவங்கியுள்ள தாக தகவல்களும் உள்ளன. பல தலைமுறைகளாக மலைப்பகு திகளில் வாழ்ந்து வரும் மக்க ளின் குடியிருப்புகளை - விவ சாய நிலங்களுக்கு வன உரிமை சட்டப்படி பட்டா கொடுத்து அம் மக்களை பாதுகாப்பதற்கு பதி லாக, அவர்களை நிலவெளி யேற்றம் செய்வது கடும் கண்ட னத்திற்குரியது. தேயிலைத் தோட் டங்களை அழிப்பதால் தோட்டத் தொழிலாளர்கள் வேலையிழப் பார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் மலைப்பிரதேசத்தில் 1.52 லட்சம் ஏக்கர் நிலப்பகுதியை யானை வழித்தடம் எனக் கூறியுள்ளார் கள். இப்பகுதிகளில் மட்டும் 35 ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்த ஒரு லட்சம் மக்களை வெளியேற் றும் நிலை ஏற்பட்டுள்ளது.
வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா
தமிழ்நாட்டில் 20 வனக்கோட் டங்களில் 2761 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள் ளது. யானைகள் புதிய வழித் தடங்களை உருவாக்குவதற்கான காரணம் அதற்கான உணவு மற்றும் தண்ணீரைத் தேடித்தான். மற்றொன்று, யானைகளின் வழக்கமான வழித்தடங்கள் ஈஷா போன்ற பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள், ரிசார்ட்கள் ஆகியவற்றால் ஆக்கிரமிக் கப்பட்டு வேலிகள் அமைக்கப் பட்டு, பாதைகள் தடுக்கப் பட்டுள்ளதால் புதிய வழித்தடங்க ளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் யானைக ளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, யானைகளின் பாரம்பரியமான வழித்தடங்களில் உள்ள ஆக்கி ரமிப்புகள் முற்றிலும் அகற்றப் பட வேண்டும். அதற்குரிய இழப்பீட்டை பாதிக்கப்படுபவர்க ளுக்கு வழங்க வேண்டும். யானை களுக்கு தேவையான உணவு, தண்ணீர் காடுகளுக்குள்ளேயே போதுமான அளவு கிடைப்ப தற்குரிய நடவடிக்கைகளை வனத்துறை மூலம் அரசு எடுக்க வேண்டும். யானைகளைக் காப் பாற்றுவதாகக் கூறி, லட்சக்க ணக்கான மக்களை வாழ்வி ழக்கச் செய்வதை அனுமதிக்க முடியாது. 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள ஷரத்தின்படி கிராமப்பஞ்சாயத்துகளில் மக்க ளின் கருத்து கேட்கப்படவில்லை. திட்டத்தை புரிந்து கொள்ளவும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திடவும் போதிய வாய்ப்பு கள் அளிக்கப்படவில்லை. காலம் காலமாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்க ளின் வாழ்வாதாரங்களை பாது காத்திட வனத்துறை புதிதாக அறிவித்துள்ள யானை வழித்தட முன்மொழிவுகளை மாநில, ஒன்றிய அரசுகள் ரத்து செய்திட வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜூன் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் கும்மிடிப்பூண்டியில் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் விஜூகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சாமிநடராஜன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் சம்பத் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் யானை வழித்தடங்கள் குறித்த வனத்துறை அறிவிப்பு பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!