tamilnadu

img

விளையாட்டு...

கத்தார் ஓபனில் சுவாரஸ்யம்

வளர்ப்போர் இல்லாமல் தானாக 2 முறை டென்னிஸ் போட்டியை பார்க்க வந்த பூனை

பொதுவாக விளையாட்டு மைதானங்களில் விலங்குகள் அடிக்கடி விசிட் அடிப்பது வழக்கம். மைதானங்களில் ரசிகர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிக்காக நாய்கள், பூனைகள் அடிக்கடி நுழையும். அதே போல பாம்புகளும் திசை மாறி விளையாட்டு மைதான ங்களில் நுழைந்து ஆட்டம் காட்டிய நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன.  இந்நிலையில், ஏடிபி பிரிவின் முக்கிய தொடரான கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் ஒரே ஒரு பூனை  இரண்டு முறை அடுத்தடுத்து மை தானத்திற்குள் நுழைந்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதி நடை பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் சபலென்கா  (பெலாரஸ்) - ஆன்டிரிவா (ரஷ்யா) ஆகி யோர் மோதினர்.

இந்த ஆட்டத்தின் போது பூனை புகுந்து சிறிது நேரம் விளையாடியது. மைதான ஊழியர்கள் விரட்ட பூனை ஓடிவிட்டது. ரிட்டன்ஸ்... மீண்டும் புதன்கிழமை அன்று ஜபியுர் (துருக்கி) - சோபியா கெனின் (அமெரிக்கா) மோதிய 3ஆவது சுற்று  ஆட்டத்திலும் அதே பூனை மீண்டும் விசிட் அடித்தது. ஜபியுர் பூனையை விரட்ட முயன்றார். ஆனால் பூனையோ, “நான் போக மாட்டேன்; எனக்கு சோர்வாக இருக்கிறது” என்று சொல் வது போல டென்னிஸ் பிட்சில் படுத்து உருண்டது. இதனை கண்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ரசி கர்களின் கைத்தட்டலால் மிரண்ட பூனை மைதான களத்தை விட்டு ஓடி விட்டது.  மைதானங்களில் விலங்குகள் அடிக்கடி நுழைவது வழக்கமான விசயம் தான் என்றாலும், ஒரே பூனை இரண்டு முறை டென்னிஸ் போட்டி யை பார்க்க வருவது போல சரியான நேரத்திற்கு வந்தது விளையாட்டு உல கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  தோஹா  (கத்தார் தலைநகர்) டென்னிஸ் மைதானத்தில் புகுந்த பூனை தங்களது எஜமானர்களுடன் வர வில்லை. மைதானத்திற்கு அருகே ஒரு வீட்டில் வளர்க்கும் பூனை தான் 2 முறை திடீரென மைதானத்திற்குள் நுழைந்து போட்டியை சிறிது நேரம்  நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.