மதுரை, ஏப்.19- மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்ட னாக மதுரையை சேர்ந்த சச்சின் சிவா உள்ளார். இவர் செவ்வாய்க் கிழமையன்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத் தில் இருந்து மதுரைக்கு செல்வ தற்காக எஸ்.இ.டி.சி அரசு விரைவு பேருந்தில் ஏற முயன்றார்.அப்போது நடத்துநர் ராஜா என்பவர், சிவாவின் மாற்றுத்திறனாளி பாஸ் செல்லாது எனக்கூறி அவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந் தது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் ராஜாவை போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, சம்பந்தப் பட்ட நடத்துநர் மீது மாற்றுத்திற னாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், கொலை மிரட்டல் விடுக்கும் வகை யில் அவர் பேசியதால் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும் மதுரை மாநகர காவல்துறை ஆணை யரிடம் சச்சின் சிவா மனு அளித்தார். '
இது குறித்து தமிழ்நாடு அனை த்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் ஆ. பாலமுரு கன் கூறுகையில், “தமிழகத்தில் தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களால் மாற்றுத்திற னாளிகள் மிகவும் அவமதிக்கப்படு கிறார்கள். மாற்றுத்திறனாளி களுக்கு தமிழக அரசு சலுகை கட்ட ணத்தில் பஸ் பாஸ் வழங்குகிறது. எங்களுக்கு வழங்கப்படும் பஸ் பாஸில் மீதித்தொகையை தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு செலுத்தி விடுகிறது. ஆனால் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள், மாற்றுத்திறனாளிகளை மிகவும் இழிவாக நடத்துகிறார்கள். மாற் றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் சிலர் மிகவும் இழி வாக நடத்தியுள்ளனர். இதுபோல் சென்ற மாதம் இராமநாதபுரத்தில் சேசு என்ற ஒரு மாற்றுத்திறனாளி யை நடுரோட்டில் இறக்கிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது, மாநில அரசும் போக்குவரத்துத் துறை நிர்வாகமும் கூடுதலாக தலையிட்டு இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.