tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

மீனவர்க்கான நிவாரணத் தொகை உயர்வு

சென்னை, மார்ச் 4 - இலங்கை கடற்படையால் பறிமுதல்  செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர் களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொ கையை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்ச மாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இலங்கைச் சிறையில் உள்ள மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நாளொன் றுக்கான உதவித்தொகையை 350 ரூபாயி லிருந்து ரூ. 500 ஆகவும் உயர்த்தி வழங்க  உத்தரவிட்டுள்ளார்.

விஜய் பகல் கனவு

சென்னை, மார்ச் 4- “2026 இல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார். கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் இவ்வாறு பேசியுள்ளார். எம்.ஜி.ஆர்- உடன் யாரையும் ஒப்பிட முடியாது. விஜய்,  எம்.ஜி.ஆர் ஆக முடியாது” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரி வித்துள்ளார்.

பதிவாளர் ஆஜராக உத்தரவு

சென்னை, மார்ச் 4- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி யாளர்களாக பணியாற்றிய குழந்தைவேலு உள்ளிட்டோர் பதவி உயர்வு கோரி 2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு  வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பதவி உயர்வு வழங்காததால், மனு தாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கை திரும்பப் பெற்றால்தான், பதவி உயர்வு  பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என பதிவாளர் ஊழி யர்களுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் பதவி உயர்வு பட்டிய லில் தங்களை இணைக்கக் கோரி பல்கலைக்கழக ஊழி யர்கள் குழந்தைவேலு உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்த னர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பதிவாளரை  மார்ச் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

‘அரசியல் காரணம் இல்லை

சென்னை, மார்ச் 4- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி சுனில்குமார் நியமிக்கப் பட்டது தகுதியின் அடிப்படையில்தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.