திருப்பூர், ஜூலை 4- நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் நாம் போராடித்தான் ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். திருப்பூரில் இந்திய சமூக விஞ்ஞானக் கழ கத்தின் சார்பில் அதன் அமைப்பாளர் வழக்கறி ஞர் எஸ். கண்ணன் தலைமையில் வெள்ளியன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங் கேற்று, ‘சட்டத்தின் ஆட்சியும், சமீபத்திய தீர்ப்பு களும்’ என்ற தலைப்பில் நீதிபதி சந்துரு சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஒருவர் எந்தத் துறையையும், எந்த அரசையும், யாரை யும் விமர்சிப்பதற்கு உரிமை கொடுக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதி மன்றம் ஆகியவையும் விமர்சனத்திற்கு உரியது தான். தில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நீதிமன்றத்தை நாடலாம் என்று பலவீனமான வர்கள் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். ஆனால் போராட்டத்தை நிறுத்திவிட்டு வாருங்கள் என்று நீதிமன்றம் சொன்னது. சட்டப்படி போராட்டம் செல்லாது என்று சொன்னார்கள். ஆனால் விவ சாயிகள் உறுதியாகப் போராடினார்கள். சட்டப்படியான போராட்டம் என்பது நம் நாட்டில் எதுவுமில்லை. நம் பிரச்சனையை நாமே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். சட்டம் அநியாயமானது என்றால், அதற்கு எதிராக போராடுவது தான் ஒரே வழி!
சுருக்கமல்ல, பறிப்பு
உலகில் அதிக தொழிலாளர் சட்டங்கள் உள்ளது இந்தியா. இந்த சட்டங்கள் மக்களுக் குப் புரியவில்லை என்று சொல்லி அதை சுருக்கு வதாக அரசு கூறியது. 29 சட்டங்களை சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றினார்கள். சட்டத்தின் உள்ளடக்கத்தை மாற்றாமல் அதை சுருக்கி னால் வரவேற்கலாம். ஆனால் அந்த சட்டத்தில் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, தொழிற்சங்க வேலை நிறுத்த உரிமை பறிக்கப் பட்டுள்ளது, நீதிமன்றங்கள் என்பதற்கு பதி லாக புதிய அமைப்புகள் என அதிகாரம் முடக்கப் படுகிறது. உண்மையில் அந்த சட்டம் சுருக்கப் படவில்லை சட்டம் விரிக்கப்பட்டுள்ளது. தொழி லாளர் வர்க்கம் நூற்றாண்டுகள் போராடி பெற்ற உரிமை பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை உலகில் பல நாடு களும், பல ஊடகங்களும் மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் (ஜூலை 1) வெள்ளியன்று கொல்கத்தா வில் கூறியிருக்கிறார். இந்த தேசம் நொறுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா வின் நீதித்துறை வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நாடு சிதறுண்டு போவதை வேடிக்கை பார்க்கும் நிலையில் நீதித்துறை உள்ளது.
போராடத் தயங்கக் கூடாது
நீதித்துறை எங்கே செல்கிறது? என்று அமர்த்தியா சென் கூறியிருக்கிறார். நாம் விமர் சனம் செய்வதற்கு தயங்கக் கூடாது. உண்மை யை சொல்வதால் உள்ளே போவோம் என்றால் உள்ளே தான் போவோமே! கேரள உயர்நீதிமன்றத்தில் முன்பொரு முறை, பிரதான சாலைகளில் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்ற தடை உத்தரவு வழங்கப் பட்டது. அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயராஜன் கடுமையாக விமர்சித்தார். அவருக்கு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. உத்தரவு நகல் கைக்கு கிடைப்பதற்கு முன்பாகவே அவர் சிறைச் சாலைக்கு போய் நின்றார். நீதிபதிகளுக்கு அவர்கள் கொடுக்கும் தீர்ப்பின் மூலம் தான் மக்களிடம் பேராதரவு கிடைக்கும். ஊடகங்களில் பரபரப்புக்காக வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை சொல்லக் கூடாது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதேனும் அறிவிப்பு வருகிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி தண்டிப்பவர்களுக்கு தகுதி வேண்டும். அந்தத் தகுதி இருக்கிறதா என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வரம்பு மீறல் கூடாது
நீதிபதிகள் விரைவாக செல்வதற்கு போக்கு வரத்து சிக்னல்களை கடந்து வரலாம் என்று ஒரு நீதிபதி உத்தரவு வழங்கினார். ஆனால் நீதிமன்றத்தில் 4 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் 7 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கிறது. மக்களுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்கவில்லையே? நீதிபதிகள் விரைவாகப் போனாலும், எங்கள் வழக்குகள் மெதுவாகப் போகிறதே. ஏன் அதைப்பற்றி யோசிக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமை தான் நீதிபதிக்கும் உள்ளது. அவர்கள் சட்டத்திலிருந்து விலக்குப் பெற்றவர்கள்அல்ல! சட்டம் இயற்றும் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் அவரவர் வரம்பு களுக்குள் செயல்பட வேண்டும். அவர்கள் வரம்பை மீறி மற்றவர்கள் விஷயத்தில் தலை யிட்டால் அது எல்லை தாண்டிய பயங்கரவாதம். அத்தகைய பயங்கரவாதத்தை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும்.
ஸ்டான் சுவாமி சாவுக்கு யார் காரணம்?
இத்தகைய பின்னணியில் இருந்து தான் சட்டத்தின் ஆட்சியைப் பற்றியும் தீர்ப்புகளை யும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 84 வயது அருட்தந்தை ஸ்டான் சுவாமி ஆதிவாசி மக்களுக் காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவர் ஆதிவாசி இளைஞர்களை தூண்டி விட்டார் என்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரால் நடுங்குவாத நரம்பு நோய் காரணமாக இயல்பாக குவளையில் தண்ணீர் குடிக்க முடி யாது. எனவே தண்ணீர் பருக முடியாத நிலையில் உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா) கேட்டு நீதிமன்றத்தில் மனுச் செய்தார். சாதாரண மனிதாபிமான அடிப் படையில் உடனடியாக அதற்கு உத்தரவு பிறப் பித்திருக்க முடியும். ஆனால் அதற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாக அந்த நீதிபதி உத்தரவிட்டார். அவரது கடுமையான நோய்க்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில் சேர அனுமதி கேட்டார். நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். அந்த அருட்தந்தையின் உயிரைப் பறித்தது யார்?
அச்சை முறிக்கும் மயிலிறகு...
மயிலிறகு எடை இலகுவாக இருந்தாலும் பாரம் ஏற்றிய வண்டியில் கூடுதலாக ஒரே ஒரு மயிலிறகை வைத்தாலும் வண்டியின் அச்சு முறிந்து விடும் என்று வள்ளுவம் சொல்கிறது. மோடி - ஷா ஆட்சியின் அந்த பாரத்தை முறிக்கும் கடைசி மயிலிறகாக ஸ்டான் சுவாமியின் அந்த உறிஞ்சி குழல் இருக்கப் போகிறது. 13 பேர் எவ்வித விசாரணையும் இன்றி குற்றம்சாட்டப் படாமல் மூன்றாண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களுக்கு பிணையும் கிடையாது. நாட்டின் அரசியல் சட்டத்தில் மதச்சார் பற்ற சோசலிசக் குடியரசு என்று பொறிக்கப்பட்டி ருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் அவர் களது அமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற சோச லிசத்தை ஏற்பதாக குறிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினுடைய அமைப்புச் சட்டத்திலும் மதச்சார்பின்மையை சோசலிசத்தை நம்புவ தாக குறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அப்படி எழுதி விட்டு அவர்கள் அதற்கு எதிராகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டத்தின் ஆட்சியா?
நாகபுரியின் ஆட்சியா?
இந்தியாவில் எந்த வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதனுடைய மூலத் தோற்றம் குறித்து கிளறக் கூடாது, வரலாற்று ரீதியான விஷயங்களில் மதச் சிக்கல்களில் சிக்கக்கூடாது என்று சட்டம் போட்டனர். ஆனால் அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சனையில் விதிவிலக்கு கொடுத்தார்கள். அங்கிருந்த மசூதி இடிக்கப் பட்ட பிரச்சனையில் நீதிமன்றத்தால் தண்டி க்கப்பட்ட அப்போதைய முதல்வருக்கு அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கிறது. ஆனால் புகார் கொடுத்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இது சட்டத்தின் ஆட்சியா? ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய லாம் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பு கொடுத் தால் அதை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று கூறுகிறார்கள். அதேபோல் ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்து, 370 சிறப்பு சட்டப் பிரிவு நீக்கம் குறித்தெல்லாம் வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் நிலைமையும் அப்படித்தான். சட்டத்தின் ஆட்சியை விட நாகபுரியின் ஆட்சி தான் நடக்கிறது. எனவே நம் உரிமையை நாம் தான் போராடி பெற வேண்டும். இது ஒவ்வொரு வரின் சமூகக் கடமை. இவ்வாறு நீதிபதி சந்துரு கூறினார். இந்தக் கருத்தரங்கில் அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் பி.மோகன் வரவேற்றார். கிட்ஸ் கிளப் பள்ளி நிறுவனர் மோகன் கார்த்திக், ஜி.நித்திஷ், வடக்கு ரோட்டரி முன்னாள் தலைவர் ஏ.செல்வராஜ், யுனிவர்சல் பள்ளி குழுமத் தாளாளர் சாவித்திரி ராஜ கோபால், தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட தலைவர் பேராசிரியர் மு.நசீரா, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செய லாளர் நிசார் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கருத்தரங்கில் வழக்கறி ஞர்கள், ஆசிரியர்கள், நகரின் பல்வேறு துறை சார்ந்தவர்களும் பெருந்திரளாக கலந்து கொண் டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் கௌரிசங்கர் நன்றிகூறினார்.