tamilnadu

img

19.50 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சென்னை, மார்ச் 14 - பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்தி ரைகள் வழங்கும் நிகழ்வை திங்களன்று (மார்ச் 14) சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க தினமான மார்ச் 14 அன்று, எம்.ஜி.ஆர். நகர் மாநக ராட்சி மேல்நிலை பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த மேயர் ஆர்.பிரியா, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரை களை வழங்கினார். இதன்பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய ஆர்.பிரியா, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 6 - 59 மாதமுடைய குழந்தைகளில் 10இல் 7 குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்க ப்பட்டுள்ளனர். 15 - 19 வயதி னரிடையே 56 விழுக்காடு பெண்களும், 30 விழுக் காடு ஆண்களும் ரத்த சோகையினால் பாதிக்கப் பட்டுள்ளனர். 5 வயதிற்குட் பட்ட குழந்தைகளில் 50 விழுக்காடு உடல் வளர்ச்சி குன்றியும், 43 விழுக்காடு எடை குறைவாகவும் உள்ளனர். எனவே, குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்ப டுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய குடற்புழு நீக்க நாள் அறிவி க்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்படுகிறது  என்றார். இந்த முகாம்கள் வாயிலாக 19.50 லட்சம் குழந்தைகளுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என்றார். இந்நிகழ்வில் துணை மேயர் மு.மகேஷ் குமார், விருகம்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிர பாகர் ராஜா, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணை யாளர்கள் எஸ்.மனீஷ், டி. சினேகா, எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.