tamilnadu

எடப்பாடி - ஓபிஎஸ் ஆட்சியை தொடர விடக்கூடாது

தூத்துக்குடி, மே 12-ஜெயலலிதா மரணத்தில் எத்தனைமர்மங்கள் உள்ளன. கட்சி தலைவிக்குதுரோகம் செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும். இவர்களை ஆட்சியில் தொடர விடக்கூடாது. என்று கனிமொழி எம்.பி.தெரிவித்தார்.ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிதி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கனிமொழி எம்.பி. சனியன்று மாலையில் தெய்வச்செயல் புரம் பகுதியில் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; இந்த தேர்தல் ஒரு இடைத்தேர்தல்இல்லை. ஆட்சி மாற்றத்தை கொண்டு வரக்கூடிய தேர்தல். அனைவரும் இந்த ஆட்சி எப்போது மாறும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஒரு குடம்தண்ணீர் ரூ.10-க்கு வாங்க வேண்டியநிலை உருவாகி உள்ளது. சாலை வசதிகிடையாது. படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை இல்லை.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் குற்றம் செய்தவர்களை காப்பாற்ற தான் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இது தான்அதிமுக ஆட்சியின் உண்மை முகம்.இந்த ஆட்சி மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை. 

நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்தார். நாங்கள் ஆட்சிக்குவந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். ஆனால்அவர்கள் கூட்டணி வைத்து உள்ள பாஜகவினர் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அதன்படி நாங்கள் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் நீட் தேர்வைதமிழகத்தில் ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை யாரும் காப்பாற்ற முடியாத நிலை வந்து விடும். இதனை உணர்ந்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்தில் ஏதாவதுஒரு உண்மை உள்ளதா? அவர் மரணத்தில் எத்தனை மர்மங்கள் உள்ளன.கட்சி தலைவிக்கு துரோகம் செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும். இவர்களை ஆட்சியில் தொடர விடக்கூடாது. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் செக்காரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ,நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.