முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கூலியை முடிவு செய்க! கறிக்கோழி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, ஏப். 29 - முத்தரப்பு கூட்டத்தை விரைந்து நடத்தி, கறிக்கோழி விவசாயிகளின் கூலியை தீர்மானிக்க அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளருமான பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு கிலோவுக்கு ரூ. 6.50 லிருந்து வளர்ப்பு கூலியை ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். ஆண்டுதோறும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வளர்ப்பு கூலியை நிர்ணயிக்க வேண்டும். 50 கிராம் எடையுள்ள தரமான 6 பேட்ஜ் குஞ்சுகளை ஆண்டுதோறும் கம்பெனிகள் வழங்க வேண்டும். கடந்த காலத்தைப்போல் தமிழக அரசும் குஞ்சுகளை வழங்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு விவ சாயிகள், தொழிலாளர்களை பாது காக்க நலவாரியம், இ.எஸ்.ஐ மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும், கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதோடு, குறைவான பிரீமியம் தொகையில் காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கோழியை கொள்முதல் செய்த ஒரு வாரத்திற்குள் கம்பெனி கள் விவசாயிகளுக்கு பணம் தர வேண்டும், பண்ணை அமைக்க நிறு வனங்கள் வெற்று காசோலை, நிலப்பட்டா கேட்பதை கைவிட வேண்டும், பண்ணை அமைக்க வங்கிகள் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி திங்க ளன்று (ஏப்.28) சென்னையில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “தமிழகத்தில் சுமார் 40ஆயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. விவசாயத்தின் உபத்தொழி லாக கறிக்கோழி வளர்ப்பு உள்ளது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயி களின் வாழ்வதாரமாக இந்த தொழில் உள்ளது. எனவே, அரசு உடனடியாக முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கூலியை நிர்ணயிக்க வேண்டும். இதர பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார். “சுகுணா, பயனீர் போன்ற பெரு நிறு வனங்கள் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன. இந்த தொழிலில் அரசின் கட்டுப்பாடு இல்லை யென்றால், கறிக்கோழி வளர்ப்பு நசிந்துவிடும். எனவே, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் கூறினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பி.பெருமாள் தலைமையில் நடை பெற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், அகில இந்திய துணைத்தலைவர் டி.ரவீந்திரன், சங்கத்தின் மாநிலத் தலைவர் த.ஏழுமலை, பொருளாளர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.