அன்னையர் தின வாழ்த்து
சென்னை: அன்னையர் தினத்தையொட்டி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “மண்ணு லகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னை யர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
மே 15-இல் உதகை மலர் கண்காட்சி
சென்னை: கோடை விடுமுறையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழா கொண்டாடுவது வழக்கம். இந்த கோடை விழாவின் ஒரு பகுதியாக மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகை யில், இந்த மலர் கண்காட்சி மே 15 முதல் மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியானது 5 நாட்களிலிருந்து 10 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகை மலர் கண்காட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (மே 12) உதகைக்குச் செல்கிறார். இதையடுத்து மே 15 ஆம் தேதி, அந்த உதகை மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து, மே 16 அல்லது 17 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கிடையே 4 நாட்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உதகையில் தங்கி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்
மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக சனிக்கிழமை சென்னையில் பேரணி நடைபெற்றது. இந்நிலையில், “பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் திமுகவி னர் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்திய ராணுவத்திற்கு அல்ல. ராணுவ வீரர்கள் என்ன எல்லையில் போய் சண்டையா போட்டார்கள்?” என்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி யது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக செல்லூர் ராஜூ தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், “செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு-பகல் பாராமல் நாட்டுக்காக பாடுபடும் நமது ராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு; எங்கள் குடும்பமே முன்னாள் ராணுவ வீரர்களை கொண்டது. இன்று நேற்று நாளை எப்பொழுதும் ராணுவ வீரர்களை மதிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
நடவடிக்கை ரத்து
சென்னை: “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட் டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக” பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பள்ளிக் கல்வியின் பல்வேறு துறை இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருக்கிறார்.
உயிரை விழுங்கும் விளையாட்டு
திருவள்ளூர்: ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர். இந்த வகையான சூதாட் டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வரு கின்றன. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த முருகன், தனியார் வங்கியின் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்தார். இவர் ஆன்-லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
கலைந்து போனதா கனவு?
கும்பகோணம்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறி விக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, கோட்டம், வட்டம், மக்கள்தொகை, பரப்பளவு என ஒரு மாவட்டத்துக்கு தேவையான அம்சங்கள் இல்லாததால், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வழிவகை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், கும்பகோணம் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.