tamilnadu

பஞ்சப்படியில் அடிப்படை மாற்றம் ரயில்வே ஊழியர்கள் கொந்தளிப்பு

மதுரை:
மத்திய அரசு விலைவாசிப் புள்ளி அடிப்படையை 2001-ஆம் ஆண்டிலிருந்து இருந்து 2016-ஆம் ஆண்டிற்கு மாற்றி உள்ளது.இதனால் மத்திய அரசு ஊழியர் களின் பஞ்சப்படி குறையும். ஜனவரி 2020- ஆம் ஆண்டு பஞ்சப்படி21 சதவீதத்திற்குப் பதில் பத்து சதவீதமாகக் குறையும். 2020-ஆம்ஆண்டு ஜூலையில் 24 சதவீதத்துக்குப் பதில் 13 சதவீதமாக்கப் பட்டுள்ளது. 2021-ஜனவரியில் 27 சதவீதத்திற்குப் பதில் 17 சதவீதமாக குறையும். ஜனவரி 2020-ஆம் ஆண்டு  முதல் ஜூலை 2021-ஆம் ஆண்டு வரை மத்திய அரசுஊழியர்களுக்கு பஞ்சப்படி இப் போது கிடைக்கும் 17 சதவீதமே தொடரும். பத்து சதவீதம் “சுவாகா” செய்யப்பட்டுவிட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.37ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்படும். மாநில அரசு ஊழியர் களுக்கு  82 ஆயிரம் கோடி இழப்புஏற்படும். 2001-ஆம் ஆண்டு அடிப்படையிலேயே பஞ்சப்படி வழங்க வேண்டும். 2016-ஆம் ஆண்டு அடிப்படையில் விலைவாசிப் புள்ளிவழங்கக்கூடாது என ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (டிஆர்இயு)கோட்டச் செயலாளர் ஆர்.சங்கரநாராயணன் வலியுறுத்தியுள்ளார்.