* ரஷ்யாவின் தாக்குதலில் இது வரை அழிக்கப் பட்ட உக்ரைன் ராணுவ இலக்குகள்:
மொத்தம் 3593 இலக்குகள் அழிக்கப் பட்டன.
- 98 தகவல் தொடர்பு மையங்கள்.
- 237 ராடார் மையங்கள் மற்றும் வான் தாக்குதல் பாதுகாப்பு மையங்கள்.
- 389 டாங்கிகள்
- 770 ஆயுத வாகனங்கள்
- 1286 விசேட ராணுவ வாகனங்கள்
- 133 விமானங்கள்
- 126 ஆளில்லா டிரோன் விமானங்கள்
- 436 கவச வாகனங்கள்
- 118 பன்னோக்கு ஏவுகணை வாகனங்கள்
- 15704 உக்ரைன் வீரர்கள் மரணம்
- 860 போர் கைதிகள் சிறைபிடிப்பு.
* மரியபோல் எனும் முக்கிய நகரம் ரஷ்ய ராணுவத்தின் கைகளில் சிக்கும் சூழல் உள்ளது எனவும் நாஜி அமைப்பான அசோவ் பட்டாலியன் கடும் சேதங்களை சந்தித்து வருவதாகவும் ஜெலன்ஸிக்கு அவரது ராணுவ தளபதி
கள் எடுத்து கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* ஒரு டுவிட்டர்வாசியின் கேள்வி:
- ஈராக் பற்றி பொய் சொன்னார்கள்
- லிபியா குறித்து பொய் சொன்னார்கள்
- சிரியா குறித்து பொய் சொன்னார்கள்
- ஆப்கானிஸ்தான் குறித்து பொய் சொன்னார்கள்
- வியட்நாம் குறித்து பொய் சொன்னார்கள்
- கொரியா குறித்து பொய் சொன்னார்கள்.
- இப்பொழுது உக்ரைன் குறித்து அவர்கள் சொல்வதை உண்மை என எப்படி நம்புவது?
* உக்ரைனின் இன்னொரு நாஜி அமைப்பான “அய்டர் பட்டாலியன்” ஒரு பெரிய சிறைச் சாலை நடத்தி வந்ததும் அதில் ரஷ்ய மொழி பேசும் மக்களும் உக்ரைன் அரசாங்கத்தை எதிர்த்த கம்யூனிஸ்டுகள் உட்பட பலரும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதும் ரஷ்ய படைகள் கண்டுபிடித்துள்ளன.
* ரஷ்யாவின் பல ஊடகங்களை மேற்கத்திய நாடுகள் முடக்கியுள்ளதாலும் முகநூல் ரஷ்யாவுக்கு எதிரான வன்முறை பதிவுகளை அனுமதிப்பதாலும் முகநூல்/ கூகுள்/ இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ரஷ்யா முடக்க முடிவு செய்துள்ளது.
* சிரியா/ வெனிசூலா/ கியூபா/ மத்திய ஆப்பிரிக்கா ஆகிய தேசங்களிலிருந்து பலர் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட உக்ரைனுக்கு செல்லஅந்தந்த அரசாங்கங்களிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
* ஆலிவர் ஸ்டோன் எனும் ஆஸ்கார் பரிசு பெற்றஹாலிவுட் இயக்குநர் 2014ம் ஆண்டு எடுத்த
“உக்ரைனில் பற்றி எரியும் தீ” எனும் ஆவணப்படத்தை யூ டியூப் தனது இணையத்திலிருந்து அகற்றிவிட்ட்து. இந்த ஆவணப்படம் 2014ல் அமெரிக்காவின் தூண்டுதலால் நடைபெற்ற கலவரங்கள் குறித்து ஆதாரங்களுடன் விளக்குகிறது. யூ டியூபின் ஜனநாயக விரோதப்போக்கை பலரும் கடுமையாக விமர்சித் துள்ளனர்.
* உக்ரைனுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு ஆயுதங்கள் சட்டப்படி போரில் பங்கேற்றுள்ளதாக கருதி அவற்றின் மீது தாக்குதல் நடத்தும்உரிமை தங்களுக்கு உண்டு என ரஷ்யா எச்சரித்துள்ளது.
* ரஷ்ய மோழி பேசும் மக்கள் வாழும் டோனட்ஸ்க்பகுதியில் உள்ள மசூதிகள் மீது அசோவ் பட்டாலியன் நாஜிக்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்த மசூதிகளின் இமாம்கள் புகார் தெரி
வித்துள்ளனர். புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதே சமயத்தில் மரியபோல் நகரில் உள்ள மசூதிகள் மீது ரஷ்யா தாக்குதல்நடத்தியதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய் என அந்த நகரின்முஸ்லீம் மக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
* ரஷ்யாவும் உக்ரைனும் பல உணவுப்பொருட் களை உற்பத்தி செய்யும் தேசங்கள் என்பதால் இந்த போர் கடும் உணவு பற்றாக்குறையை உலகம் முழுவதும் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என ஐ.ந.சபை எச்சரித்துள்ளது.
* ரஷ்ய தலைவர்களுடன் நேரடியாக பேச தான்தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதனை வரவேற்றுள்ள ரஷ்ய தலைவர்கள், புகைப் படங்களுக்காக இந்த சந்திப்பு இருக்க கூடாதுஎனவும் புடினும் ஜெலன்ஸ்கியும் சந்தித்தால் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் சூழல் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதற்கிடையே ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர், ஜெலன் சிக்கு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.
* உக்ரைன் தனது எல்லா டிரோன் விமானங்களையும் இழந்துவிட்டதாக போர் முனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.போரில் இது பெரிய பின்னடைவு ஆகும்.
* உக்ரைனுக்கு ஆதரவாக போரிட வந்த வெளி நாட்டினர் சிலாவுயன்ஸ்க் எனும் ஊரில் தங்கியிருந்த ஒரு பெரிய விடுதியை ரஷ்ய ஏவுகணை அழித்துவிட்டது. அதனுள் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டு வீரர்கள் இறந்துவிட்டதாக ஆதாரத்துடன் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
* உங்களுக்கு தெரியுமா? உக்ரைனில் உள்ள பலகம்பெனிகளில் கீழ்கண்ட அரசியல்வாதிகளின் மகன்கள் இயக்குநர்களாக இருந்தனர். கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டினர்.
- ஜோ பைடன் மகன்
- ஒபாமா ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் கெர்ரியின் மகன்
- அமெரிக்க குடியரசு கட்சியின் ஜானதிபதி வேட்பாளர் மிட் ரோம்னியின் மகன்
- அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் மகன்.
தொகுப்பு : அ.அன்வர் உசேன்