வாட்ஸ்அப்பில் இமேஜ் ஸ்கேனிங் மூலம் மோசடி - எச்சரிக்கை
வாட்ஸ்அப்பில் சாதாரண புகைப்படங்களுடன் மால்வேர்களை இணைத்து அனுப்பி ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப்பில், ஸ்டீகனோகிராஃபி (Steganography) என்ற முறையை பயன்படுத்தி, சாதாரண புகைப்படங்களுடன் தீங்கிழைக்கும் மால்வேர்கள் பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது. அப்புகைப்படத்தை பயனர்கள் பதிவிறக்கம் செய்தால், அவர்களின் மொபைல்போன் அல்லது கணினி ஹேக்கர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதன்மூலம், பயனர்களின் வங்கி விவரங்கள், ஒ.டி.பி (OTP) மற்றும் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் திருடி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மோசடியில் இருந்து தப்பிக்க வாட்ஸ்அப் பயனர்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்: 1) தெரியாத நபர்களிடம் இருந்து வரும் கோப்புகள் மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும். 2) உங்கள் வாட்ஸ்அப் Settings-இல் Auto-Download ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்கவும். இதன் மூலம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதை தவிர்க்கலாம். 3) உங்கள் மொபைல் சாதனத்தை தொடர்ந்து அப்டேட் செய்யவும். 4) உங்கள் சாதனங்களில் ஆன்டிவைரஸ்களை பயன்படுத்தலாம். 5) சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது மெசேஜ்களை தவிர்க்கவும். 6) உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மோசடி பற்றித் தெரிவிக்கவும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பயனர்கள், ஹேக்கர்களிடம் சிக்காமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இன்ஸ்டாகிராமில் பதின்வயது பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு!
இன்ஸ்டாகிராமில், 16 வயதுக்குட் பட்ட பதின்வயது பயனர்களு க்கு புதிய கட்டுப்பாடு விதிக் கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம், 16 வயதுக்குட்பட்ட பதின்வயது பயனர்கள் பயன்படுத்து வதற்காக இன்ஸ்டாகிராம்-டீன்ஸ் கணக்கு சேவையை கடந்த ஆண்டு தொடங்கியது. உலகளவில் சுமார் 54 மில்லியன் பதின்வயதினர் ஏற்கனவே இந்த டீன்ஸ் கணக்குகளுக்கு மாற் றப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரி வித்துள்ளது. டீன்ஸ் கணக்குகளில், மெசேஜ் கட்டுப்பாடு, ஆன்லைன் நேர கட்டுப்பாடு, Sensitive பதிவுகளுக்கான கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டீன்ஸ் கணக்குக ளில் இருந்து இனி பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் பதின்வயது பயனர் கள் நேரலை ஒளிபரப்புகளைத் தொடங்க வோ அல்லது டைரெக்ட் மெசேஜ்களில் (Direct Messages) வரும் தேவையற்ற (ஆபாச) புகைப்படங்களை மங்க லாக்கும் (Blur) வசதியை நிறுத்தவோ முடியாது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் முதற் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது. விரைவில் பிற நாடுகளுக்கு இந்த அம்சம் வழங்கப்பட உள்ளது. மேலும், பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் போன்ற மற்ற மெட்டா தளங்களுக்கும் டீன் கணக்கு களை கொண்டுவர உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.