tamilnadu

img

பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பறக்கும் விமானம்

த.கண்மணி
மனிதராய் பிறந்த ஒவ்வொரு வருக்குமே வானில் பறவை போல பறக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். வானில் பறப்பதோ உயரச் சென்று பார்ப்பதோ செல்வந்தர்களுக்கு வேண்டு மானால் எளிதாக இருக்கலாம், ஆனால் நமது நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு அது அவ்வ ளவு எளிதல்ல. அவர்கள் வானை அண்ணாந்து பார்ப்பதோடு நிறுத்திக்கொள்கின்றனர். இனி நடுத்தர மக்களும் வானில் பறக்கலாம் என்ற நிலையை எளிதாக்கிக கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அடுத்த கண்டனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் எபிநேசர். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை பன்னி ரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி மூலம் படித்து முடித்துள்ளார். எபினேசர் தனது பள்ளி பருவத்திலேயே அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவராகவும், மேலும் சராசரி மாணவர்களை போல இல்லாமல் மதிப்பெண் களில் குறைவானவராகவும் எதையும் அலசி ஆராயும் புத்திக்கூர்மை மிகுதியானவராகவும் இருந்துள்ளார். கல்வியில் மட்டுமின்றி இசையிலும், வரைகலையிலும் நன்கு தேர்ந்தவராகவும், குறிப்பாக இசையில் டிரம்ஸ் கருவியில் கின்னஸ் அளவிற்கு தன்னை தயார்செய்து வந்துள்ளார். இதுகுறித்து எபிநேசரிடம் கேட்ட பொழுது “நான் ஒன்றில் மட்டு மல்ல எல்லா விதத்திலும் சாதனையாளனாக இருக்கவேண்டும் என்று கருதினேன். மேலும் இசையில் என்னதான் ஆர்வம் இருந் தாலும் எனதுகனவும் இலக்கும் வானில் பறக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது” என்கிறார் எபினேசர். வாழ்வில் பல இன்னல்கள் இருந்தாலும் எபிநேசர் தான் வானில் பறக்க வேண்டும் என்ற கனவுக்காக பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். முதலில் போபாலில் உள்ள பிரபலமான பல் கலைக்கழகம் ஒன்றில் தனது ஏரோனாடிக் என்ஜினியரிங் படிப்பை முடித்த எபிநேசர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று தனது விமான பைலட் என்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.

இலகுரக விமானத்தின் அமைப்பு.
இந்த இலகுரக விமானம் என்பது எடை குறைந்த அலுமினியத்தால் செய்யப்பட்டது. 314 சி.சி யுடன் 34 குதிரை திறன் கொண்ட என்ஜின் உள்ளது. மேலும் இந்த இலகுரக விமானத்தில் மூன்று வகையான டேங்க் பொருத்தப்பட்டு, ஒன்றில் உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்து வது. மற்றொரு டேங்கில் பாக்டீரியாவில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்து வது. இறுதியாக உள்ள டேங்கில் இருந்த சாதாரண பெட்ரோலை பயன்படுத்தி இயக்கு வது என்ற அமைப்பில் வடிவமைத்துள்ளார்.  மேலும் இது முற்றிலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட விமான பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதால் இதன் விலை ஏறத்தாழ ரூ.7 முதல் 10 லட்சம் வரையே ஆகிறது. அதாவது ஒரு காருக்கு நிகரான விலையில் இந்த விமானம் அமைந்துள்ளது. இந்த விமானத்தை அடர்ந்த காட்டுப் பகுதியில் ரோந்து பணிக்கும், காவல்துறை கண்காணிப்புப் பணிக்கும் பயன்படும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் 11ஆயிரம் அடி உயரத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறனுடையது.

அமெரிக்கர்களின் வரவேற்பு
எபிநேசர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த பொழுது தனது பன்னிரண்டு ஆண்டுகால ஆராய்ச்சியின் மிக முக்கியப் பகுதியாக வருடத்துக்கு ஒருமுறை அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியின் மூலம் தனது கண்டு பிடிப்பை உலகப்பார்வைக்கு கொண்டு சேர்த்தார். அவர் அந்த கண்காட்சியில் தனது விமானத்தை வடிவமைத்து, பல கட்டங் களை கடந்தார். இறுதியாக அங்கிருந்த அமெ ரிக்கர்கள் எபிநேசர் வடிவமைத்த விமா னத்தை கண்டு வியந்து அவரை அங்கீ கரிக்கும் வகையில் “அவரது விமானத்தை உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் விமானம் பாதுகாப்பான விமானம்(Cheapest & Safest flight) என்ற விருதை வழங்கி அவரை கௌரவித்தனர். அதுமட்டுமின்றி எபிநேசரின் கண்டுபிடிப்புக்கு ஊக்க மளிக்கும் வகையில் கண்டுபிடிப்பின் வளர்ச்சிக்கு அமெரிக்கர்கள் எபிநேசருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இதைப்பற்றி எபிநேசரிடம் கேட்டபொழுது “என்னோட விமானத்துக்கு அங்க ஒரு அங்கீ காரம் கிடச்சுது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனா என்னோட ஊருல பண்ணனும். என்னோட நாட் டுக்காக பண்ணனும். அதான் என்னோட ஆசை” என்கிறார். பிறகு அமெரிக்காவிலி ருந்து இந்தியா திரும்பிய எபிநேசர் தனது கண்டுபிடிப்பை மேம்படுத்த தற்போது போராடிக்கொண்டிருக்கிறார்.

எதிர்பார்ப்பு
எபிநேசர் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது, கிராமப்புறங்களில் விமானங்கள் பறக்கும் வசதி இருப்பது மிகவும் குறைவு. எனவே அரசாங்கம் முன்னெடுத்து தனது கிராமத்தில் அதற்கு வழிவகை செய்து தரவேண்டும். டிஜிசிஏ கிளியரன்ஸ், விமானத்திற்கான பதிவு கள் போன்றவற்றை செய்து தரவேண்டும் என்பதே. மேலும் அவர் தொடர்ந்து ஊடகங்க ளின் மூலம் தனது கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தாலும் அதனால் எந்த முன்னேற்ற மும் இல்லை என்றும், அமெரிக்கா போன்ற நாடுகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத் துவம் அளித்து கொடுக்கும் வரவேற்பு நமது நாட்டில் இல்லை என்றும் இது மனவருத் தத்தை அளிப்பதாகவும் கூறுகிறார். அதுமட்டுமின்றி தங்களது கிராமங்களி லேயே விமானம் பற்றி அறிய ஆர்வம் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், போலீசார் உள் ளிட்டோர் விமானம் பற்றி அறிய விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன் என்று கூறுகிறார் விமானி எபிநேசர்.