இம்பால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண் டாக தொடர்ந்து வன்முறை சம்ப வங்கள் நிகழ்ந்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன் கூட இம் பால் பள்ளத்தாக்கு பிராந்தியத் தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறைக்கு 230க்கும் மேற்பட்டோர் பலியா கியுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் பாஜக தலைவரும், முதல்வரு மான பைரேன் சிங்கை, முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி 19 பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு கையொப்பத்துடன் கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் சட்டமன்ற சபா நாயகர் தோக்சோம் மற்றும் அமைச்சர்கள் கையொப்ப மிட்டுள்ள அக்கடிதத்தில், “மணிப்பூரில் கடந்த ஒன்றரை வருடமாக வன்முறை நீடிக்கிறது. பாதுகாப்புப் படை மற்றும் புதிய ஆலோசகரை நியமிப்பதால் வன்முறை பிரச்சனை முடிவுக்கு வராது. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து நீடிப்பது நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். அமைதியை நிலைநாட்ட தவறிய முதல்வர் பைரேன் சிங்கை மாற்றுவதுதான் ஒரே தீர்வு. இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் எங்களை (பாஜக எம்எல்ஏக்கள்) பதவி விலக மாநில மக்கள் வற்புறுத்து கின்றனர்” என கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. புதுதில்லியில் செவ்வாய்க் கிழமை (அக்., 15) மணிப்பூரைச் சேர்ந்த மெய்டேய், குக்கி, நாகா பிரிவு பாஜக எம்எல்ஏக்கள் வன் முறை பிரச்சனைக்கு தீர்வு காண உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தி னர். இந்த ஆலோசனைக்குப் பின்பு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது. புதன்கிழமை (அக்., 16) 5 பாஜக எம்எல்ஏக்கள் நேரடியாக பிரதமர் மோடியிடம் கடிதம் கொடுத்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.