tamilnadu

img

7 இடங்களில் அகழாய்வுப் பணிகள்

சென்னை,பிப்.11- கீழடியை சுற்றியுள்ள பகுதிகள், கங்கைகொண்ட சோழபுரம்-மாளி கைமேடு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொல்லியல் துறை சார்பில் ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் கங்கை கொண்டசோழபுரம்- மாளிகைமேடு ஆகிய அகழாய்வுப் பணிகளை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். கீழடி அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டு மானங்களின் தொடர்ச்சி, மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக விளங்கும் அரிய தொல்பொருட்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு கொண்டதற்கான கூடுதல் சான்றுகளைத் தேடியும், நகர நாகரிகக் கூறுகளை வெளிப் படுத்தும் நோக்கிலும்  8-ம் கட்ட அகழாய்வு நடைபெறும்.

தண்பொருனை ஆற்றங்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினரின் மேம்பட்ட பண் பாடு 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்விலும் அவற்றில் கிடைக்கக் கூடிய தொல் பொருட்களுக்கும், வரட்டன பள்ளி மற்றும் கப்பலவாடி போன்ற ஊர்க ளிலும் கண்டறியப்பட்டதன் வாயி லாக புதியக் கற்கால மனிதர்கள் தங்களது வேளாண்மை நடவடிக்கை களை தமிழகத்தில் 4000 ஆண்டு களுக்கு முன்னரே மேற்கொண்டிருந்த னர் என்பதனை நிரூபிக்க சான்றாக இத்தளம் அமையும். சோழப்பேரரசின் மா மன்னன் முதலாம் ராசேந்திரனின் தலை நகரான கங்கை கொண்ட சோழ புரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில்  புதைந்துள்ள கட்டு மானங்களை வெளிக் கொணர்ந்து அரண்மனை யின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலையில் நம்பி ஆற்றின் இடது கரையில் துலுக்கர்பட்டி என்ற  ஊர் அமைந்துள்ளது. இவ்வூரி லிருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5 கி.மீ தொலைவில், வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதா கும். நம்பி ஆற்றின் கரையில் இரும்புக் காலப் பண்பாட்டின் வேர்க ளைத் தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் வெம்பக்கோட்டை என்ற ஊர் அமைந்துள்ளது. மேடு  என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப் படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில்  நுண்கற்காலம் முதல் இடைக்கா லம் வரை தொடர்ந்து வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிப்படுத்து கின்றது.

தற்போது மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத் த்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கரு விகளைச் சேகரிப்பதாகும். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் - மேலச்சேரி சாலையில் பென்னாகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் பாலாற்றின் இடது கரை யில் பெரும்பாலை என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அமைந்துள்ளது. இவ்வூர் கொங்கு நாட்டின் வடவெல்லையாக தொன்று தொட்டு கருதப்படுகிறது. இங்குள்ள வாழ்விட மேடானது தற்போதைய நிலவியல் அமைப்பிலிருந்து 3 முதல்  4 மீட்டர் உயரத்தில் 75 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படு கிறது. பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்கமாகும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை யானது ஏற்கனவே அகழாய்வுகளை மேற்கொண்டு வரும் கீழடி, சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை ஆகிய இடங்களில்  மட்டுமின்றி புதிதாக திருநெல்வேலி மாவட்டம் - துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் - பெரும்பாலை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிதியாண்டில் 5 கோடி ரூபாய் நிதியில் மேற்படி ஏழு தொல்லி யல் அகழாய்வுகள், இரண்டு கள ஆய்வுகள் மற்றும் சங்ககால கொற்கைத் துறைமுகத்தினை அடை யாளம் காண முன்களப்புல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.