tamilnadu

img

தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தஞ்சாவூர், அக்.17 -  தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 31  லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உரு வாக்கி தரப்பட்டுள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். தஞ்சாவூர் டைட்டல் பார்க்கில் வியாழக் கிழமை தனியார் நிறுவனத்தின் சார்பில் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, எம்எம்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன்,  துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியா ளர்களிடம் கூறியதாவது:  இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத  வகையில், தமிழகத்தில்தான் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வந்து  குவிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றாண்டு களில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி முதலீடு கள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பேர் பெண்கள். தமிழகத்தில் மட்டும்தான் பெண்கள்  அதிகளவில் அனைத்துத் துறைகளிலும்  ஆண்களுக்கு நிகராக வேலைவாய்ப்பு களில் பணியாற்றி வருகின்றனர். தமிழ கத்தில் மொத்தம் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் டைட்டல் பார்க் தொடங்கப்பட்ட, 15 நாட்களிலேயே அனைத்து அலுவலகங்களும் நிரம்பி விட்டன. இங்குள்ள இளைஞர்களுக்கு பெரும் வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப் பட்டுள்ளது. தஞ்சாவூரில் மேலும் ஒரு டைட்டல் பார்க் திறக்க வேண்டும் என  மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். செங்கிப்பட்டியில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் தஞ்சை விமான நிலையத்தில் பயணி கள் விமான போக்குவரத்து தொடங்க முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரை வில் விமான போக்குவரத்து தொடங்கப்ப டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத் தில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே கொண்டு வரப்படும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழிற்சா லைகளால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சாலை கள் வரலாம். இதனால் தஞ்சைக்கு தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.