சாத்தூர், அக்.18- மோட்டார் வாகனத் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் ஓட்டுநர், வாகன உரிமை யாளர் மற்றும் சிறு குறு பணிமனை தொழிலாளர்கள் உள்ளிட்ட அனை வரின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் மோட்டார் வாகன சட்டம் 2019 ஐ ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னத்தின் 5 ஆவது மாநில மாநாடு வலி யுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தோழர் கே.வைத்தியநாதன் நினை வரங்கில் நடைபெற்ற மாநில மாநாட்டி ற்கு சம்மேளனத் தலைவர் கே.ஆறுமுக நயினார் தலைமை வகித்தார். சிஐடியு கொடியை மாநிலத் துணைத் தலைவர் எஸ். கே. தியாகராஜன் ஏற்றி வைத்தார். சங்கக் கொடியை முன்னாள் மாநி லத் தலைவர் உன்னி ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு செயலாளர் கே. விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்
அஞ்சலி தீர்மானத்தை துணைத் தலைவர் ஏ.ராயப்பன் வாசித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாக ராசன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். சம்மேளன பொதுச் செய லாளர் எஸ்.மூர்த்தி வேலை அறிக்கை யையும், மாநில பொருளாளர் வி.குப்பு சாமி வரவு- செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு விருதுநகர் மாவட்டச் செயலாளர் பி. என்.தேவா, மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவு செய்து சிஐடியு மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரையாற்றி னார். சங்க விருதுநகர் மாவட்டச் செய லாளர் எம்.திருமலை நன்றி கூறினார். பேருந்து,லாரி,டாக்ஸி,டெம்போ, மேக்சிகேப் உள்ளிட்ட பொதுப் போக்கு வரத்து வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட் களை மானிய விலையில் வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களை குறைத்து நெறிப்படுத்த வேண்டும். காலாவதியான டோல்கேட்டு களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
சுங்கச் சாவடிகளில் வாக னங்களை பாதுகாப்பாக நிறுத்தி ஓய்வெடுக்க, ஓட்டுநர்களுக்கு கழி வறை, குளியலறை வசதிகள் செய்து தர வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு பாது காப்பு ஏற்பாடுகள் செய்துதர வேண்டும். வழிப்பறிக்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர்களை காவல்துறை யினர் அநாகரிகமாக பேசி, அநியாய அபராதத் தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும். வாகனச் சோதனை என்ற பெயரில் ஆர்டிஓ வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அபராதமாக பெரும்தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும். மாநில அரசானது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆட்டோ, டெம்போ, டாக்சி, லாரி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாக னங்களுக்கு நிறுத்துமிடம் அமைத்துத் தர வேண்டும். அங்கு குடிநீர் ,மின் இணைப்பு, கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, இயற்கை மரணம் உள்ளிட்ட கேப்பு மனுக்களை பரி சீலனை செய்து உடனடியாக நிதி வழங்க வேண்டும். மேலும் வீடு கட்ட ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். விபத்தால் உயிரிழக்கும் தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், இயற்கை மரணம் எனில் ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநாட்டில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.