சென்னை, ஏப். 8- கொரோனா பேரிடர், ஊர டங்கு தரவு உள்ளதால் மனநோய் மாற்றுத்திறனாளிகளை சென்னை, தேனியில் உள்ள அரசு மன நல காப்பகங்களில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. விரித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி பொதுச் செயலாளர் நம்பிராஜன் ஆகி யோர் முதலமைச்சருக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தின் விபரம் வருமாறு:-
முக்கிய வழிபாட்டுத் தளங் கள், சுற்றுலாத்தளங்களிலும் மற்றும் தமிழகத்தின் பல பகுதி களிலும் சாலைகளில் சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கான மன நோய் மாற்றுத்திறனாளிகளை இல்லங்களில் தங்கவைத்து பாது காக்கவும், மறுவாழ்வு அளிப்ப தற்குமான கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் பொதுவாக குறை வாகவே உள்ளது. தொண்டு நிறுவனங்களை நம்பியே அரசு செயல்பட வேண் டிய நிலைமை இருந்து வந்தது. கொரோனா பேரிடர் மற்றும் ஊர டங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில், அப்படி சுற்றித்திரி யும் மனநோய் மாற்றுத்திற னாளிகளை ஒருசில இடங்களில் அரசு அதிகாரிகள், காவல்துறை யினர் ஆங்காங்கே இல்லங்க ளில் கொண்டுசென்று விட முயற்சிக்கிறபோதும், அங்குள்ள இட நெருக்கடி, ஊரடங்கு நேரத்தில் போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காத கார ணத்தால், தொண்டு நிறுவனங்க ளும் மறுப்பதாக தெரிகிறது.
எனவே, சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரியும் மன நோய் பாதித்த மாற்றுத்திறனாளி கள் எண்ணிக்கை இந்த ஊர டங்கு நேரத்திலும் குறைந்ததாக தெரியவில்லை. அங்காங்கே சுற்றித் திரிவதும், நெடுஞ்சாலை களில் நடந்தே செல்வதும் தொடர்கிறது. ஊரடங்கு நேரத் தில்கூட அவர்கள் அனைவரை யும் சேகரித்து இல்லங்களில் தங்க வைப்பதற்கோ, கொரோனா தொற்றிலிருந்து பாது காக்கவோ போதிய ஏற்பாடு களை அதிகாரிகள் செய்யாதது தெரிகிறது.
அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக சென்னை கீழ்ப் பாக்கம் அரசு மனநல காப்ப கத்தில் தங்கவைக்கப் படும் நோயர்களின் எண்ணிக்கை குறைந்துள் ளதாக அறிகிறோம். மனநல மருத்துவர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்களும் இங்கு தேவையான அளவு உள்ளனர். தேனியில் உள்ள அரசு மனநல காப்பகத்திலும் இட நெருக்கடி இல்லாதது தெரிகிறது. எனவே, தற்போது நிலவும் கொரோனா தொற்று அபாயம் நீங்கும் வரை - ஊரடங்கு உத்தரவு நீக்கப்ப டும் வரையுமாவது, மாநிலம் முழுவதும் சுற்றித்திரியும் மன நோய் மாற்றுத்திறனாளிகளை சேகரித்து தேனி மற்றும் சென்னை அரசு மனநல காப்பகங்க ளில் தங்கவைத்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க தமி ழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.