சென்னை,ஜன.13- கோவில் நிலங்களில் குடியிருப் போருக்கு பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மா.சின்னதுரை கேட்டுக் கொண்டார். சட்டப்பேரவையில் ஆளு நர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது வருமாறு: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 1000 ரொக்கம், 1 கிலோ சர்க்கரை, 1கிலோ பச்சரிசியும், விவசாயி களின் கோரிக்கையை ஏற்று 1 செங் கரும்பை வழங்கிய முதலமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாற்றுத் திறனாளி கள் மாநாட்டில் கலந்து கொண்டு உங்களது கோரிக்கையை நிறை வேற்றுவேன் என்று உறுதி கூறியதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை யில் ரூ. 500 உயர்த்தி வழங்கியதை வரவேற்கிறோம். சென்னை பெரு நகரின் வளர்ச்சிக்கு மாடம்பாக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவிலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.
மாணவர் கல்வி உதவித் தொகை
1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்க ளுக்கு இதுவரை வழங்கி வந்துள்ள கல்வி உதவித் தொகையை காழ்ப்புணர்ச்சியுடன் ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியுள்ளது. மீண்டும் உதவித் தொகையை வழங்க வலி யுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதை வரவேற்கிறோம். இம்மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்க தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் ராஜூ என்கிற 34 வயது பட்டதாரி, ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் ரூ. 15 லட்சத்தை இழந்து விரக்தியால் விஷம் குடித்து மாண்டுள் ளார். எனவே ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பேரவைத் தலைவர்: நீங்கள் குறிப்பிட்ட சின்ராஜ் என்பவர் எங்களது உறவினர் எங்களது தொகுதி எங்கள் ஊரைச் சார்ந்தவர்.
கடன் வலையில் அப்பாவி விவசாயிகள்
சின்னதுரை: தஞ்சாவூர், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை, கடலூர் சித்தூர் ஆரூ ரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ரூ. 400 கோடிக்கு மேல் விவசாயிக ளுக்கு தெரியாமல் வங்கிகளில் மோச டியாக கடன் பெற்றுள்ளனர். விவசாயி களுக்கு தர வேண்டிய கரும்பு பாக்கித் தொகையும் தரவில்லை. இதனால் விவசாயிகள் 40 நாட்க ளுக்கும் மேலாக தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல மைச்சர் தலையிட்டு கடன் வலையி லிருந்து விவசாயிகளை விடுவிக்க வும், கரும்பு பாக்கித் தொகையை வட்டியுடன் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித மலத்தை மனிதன் அள்ளு வது முற்றிலும் தடைசெய்யப்பட் டுள்ள நிலையில் 2016-2020 ஆகிய ஆண்டுகளில் மலக்குழியில் இறங்கி 55 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந் துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மட்டும் சென்னையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய மரணங் களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுப்பதோடு, இயந்திரங்களை கூடுதலாக பயன் படுத்த வேண்டுகிறேன். தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கும் “மகளிர் உரிமைத் தொகையை” வழங்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
சட்டக்கூலியை அமல்படுத்துக!
விவசாயிகள் இந்த ஆண்டு கூடுதலாக நெற்பயிர் பயிரிட்டுள்ள தால் தமிழக அரசின் நேரடி கொள் முதல் நிலையங்களை கூடுதலாக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான கிடங்குகள் அமைக்கவேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500ஆம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4000 வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக் கான சட்டக்கூலி ரூ. 190 என அறிவிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்து விட்டது. இன்றைய விலை வாசி உயர்வை கணக்கில் கொண்டு சட்டக் கூலியை ரூ. 600 என அறிவித்து அரசாணை வெளியிட வேண்டு கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 150 நாட்க ளாக உயர்த்தவும் அரசு முன்வர வேண்டும். விவசாயத் தொழிலா ளர்களுக்கு தனித்துறையை உருவாக்கிய விவசாய தொழிலாளர்க ளின் நலனை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். கோயில் நிலங்களில் பல தலை முறையினராக வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா, வாடகை, குத்தகை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி யின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக் கையை அரசு வெளியிட்டுத் தீர்வு காண வேண்டுகிறேன். மாநிலம் முழு வதும் ஆக்கிரமிப்புகள் என்று கூறி ஏழை, எளிய மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: ஆக்கிர மிப்பு செய்துள்ளவர்கள் மட்டும் தான் அகற்றப்படுகிறார்கள். வாட கைக்கு குடியிருப்போர் யாரையும் வெளியேற்றவில்லை. குறிப்பாக, வறுமைக்கோட்டின் கீழ் வசிப்ப வர்கள், ஆதரவற்றோர், கோவில் நிலங்களில் குடியிருப்போர் யாரை யும் எந்த முன் அறிவிப்பும் கொடுக்கா மல் வெளியேற்றக்கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருக் கிறார். எனவே, அதுபோன்றோருக்கு வாடகை நிர்ணயம் செய்து அதை வசூலித்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் கூட வாடகை காரணத்திற்காக வெளியேற்றவில்லை. ஏற்கனவே, இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்று உத்தர விட்டுள்ளது. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும் என்று மேல்முறை யீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வெளியானதும் பட்டா வழங்குவது குறித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் உள்ளிட் டோரிடம் கலந்துபேசி முதலமைச் சரின் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரவைத் தலைவர்: வீட்டில் குடியிருப்போருக்கும், விவசாய நிலமாக பயிர் செய்து வருவோ ருக்கும் குத்தகையும் அந்த நிலமும் அவரது தந்தை பெயரில் இருந்தால் தந்தை மறைவுக்கு பிறகு, மகன் யாராவது அனுபவத்தில் இருந்தால் ஆக்கிரமிப்பாளர் என்றுதான் பல இடங்களில் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
ஒன்று, விவசாய நிலமாக இருந் தால் அந்த நிலத்திற்கு வாரிசு கள் இருந்தாலும் அந்த நிலம் மட்டும்தான் அவர்களுக்கு சொந்த மாகும். கட்டடமும் உழைப்பும் அவர்க ளுக்கு சொந்தமானதாகும். அதே போல், தான் விவசாய நிலமும் குத்தகை இருக்கிறது. அதில் உழைப்பு அவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மட்டுமின்றி நிறைய ஆதின நிலங்க ளில் இதுபோன்றோரை ஆக்கிர மிப்பாளர்கள் என்று சொல்வதை அரசு கண்காணித்து, என்ன குத்தகை உரிமம் கொடுக்க முடியுமோ அதை கொடுக்க வேண்டும். இதுபோன்று அல்லாமல் ஆக்கிரமிப்பு செய்திருந் தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம். அமைச்சர் சேகர்பாபு: வாடகை தாரர்கள் மரணமடைந்துவிட்டார் அவர்களது வாரிசுகள் உரிய சான்று டன் மனு அளித்தால் பெயர் மாற்றம் செய்து தரப்படும். இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காலியாக உள்ள இடங்களில் கட்டடம் கட்டுவதற்கு மனு அளித்தால் அதற்கும் அனுமதி கொடுக்கப்படும். விவசாய நிலங்களுக்கும் இதே வழி முறை பொருந்தும். நகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் அரசுத்துறைகளில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களை நிரப்ப மறுக்கும் முறையும், சமூக நீதிக்கு விரோதமான அரசாணை எண்கள் 152, 115, 139 ஆகியவற்றை ரத்து செய்திடவும், காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை நிரந்தரப் பணியிடமாக கருதி ஆட்களை நியமிக்கவேண்டும்.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் முழு உடல் பரிசோ தனை மையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக அமைத்து வருகிற காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்ற வேண்டும். பழுதடைந்த அரசுப்பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வரு வதை வரவேற்கிறோம். அரசுப்பள்ளி களில் துப்புரவு பணியாளர், தூய்மை பணியாளர் பணியிடங்கள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. இதனை பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். 12000 பகுதிநேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து சுமூகத் தீர்வு காண வேண்டுகிறேன். தமிழ்நாடு வாழ்க! தமிழ் மொழி வளர்க! இவ்வாறு சின்னதுரை பேசினார்.