tamilnadu

அணைக்கரை முத்து உடலை மறு கூராய்வு செய்ய உத்தரவு

மதுரை, ஜூலை 30- தென்காசி மாவட்டம் கடை யம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டு அருகே வயலில் மின்வேலி அமைத் தது தொடர்பாக கடையம் வனத் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரை தென்காசி அரசு மருத்துவமனை க்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந் தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதற்கிடையே, அணைகரை முத்துவின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உடற் கூராய்வு செய்யப்படடது. ஆனால், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயி உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கு புத னன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந் தது.

வழக்கு விசாரணையில் நீதித் துறை நடுவர் அறிக்கையின்படி உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையின்படி அணைக்கரை முத்து உடலில் நான்கு இடங்களில் காயங்கள் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புதனன்று கூறினார். இந்த நிலையில் வியாழ னன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்காசியில் உயிரிழந்த விவ சாயி முத்துவின் உடலை குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார். அந்தக் குழு வில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் தடய அறிவியல்துறை தலைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் தடய அறிவியல் துறை தலைவரும் இடம்பெற் றுள்ளனர்.